அனிருத் முதல் சாய் அபயங்கர் வரை இளம் இசையமைப்பாளர்கள் பற்றி ஏ.ஆர்.ரகுமான் சொன்ன கமெண்ட்

Published : May 26, 2025, 09:00 AM IST

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் திரையுலகின் இளம் இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜெயராஜ், சாய் அபயங்கர் ஆகியோரை வியந்து பாராட்டி உள்ளார்.

PREV
15
AR Rahman Praises Young Music Directors

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், இளம் தலைமுறை இசையமைப்பாளர்களான அனிருத் ரவிச்சந்தர், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் சாய் அபயங்கர் ஆகியோரின் படைப்புகளைப் பாராட்டியுள்ளார். அவர்களின் இசை தனக்கும் உத்வேகம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் வரவால் தற்போது தான் கொஞ்சம் பரபரப்பின்றி வேலை பார்ப்பதாக ரகுமான் கூறி உள்ளார்.

25
அனிருத் இசையில் சக்தி இருக்கிறது

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இசைத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. புதிய திறமைகள் தனித்துவமான பாணியுடன் வருகிறார்கள். அனிருத்தின் இசையில் ஒரு தனித்துவமான சக்தி இருக்கிறது. அது இளைஞர்களை உடனடியாக ஈர்க்கிறது. அவரது துடிப்பான இசை அற்புதம். அவரது படைப்புகளை நான் கவனித்து வருகிறேன், அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.

35
மெல்லிசையால் மனதில் நிற்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ் பற்றிப் பேசிய ரகுமான், "ஹாரிஸ் ஜெயராஜ் தனது மெல்லிசைகளால் எப்போதும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது இசையில் ஒரு புத்துணர்ச்சி இருக்கிறது. பல ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து நிற்கும் அவரது திறமை பாராட்டுக்குரியது," என்றார்.

45
சாய் அபயங்கரின் வரவால் மகிழ்ச்சி

சாய் அபயங்கரின் 'ஆசை கூட' பாடலைக் குறிப்பிட்ட ரகுமான், "சாய் அபியங்கர் போன்ற இளம் திறமைகள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 'ஆசை கூட' பாடல் மிகவும் பிரபலமானது. இதுபோன்ற புதிய சிந்தனைகளுடன், புதிய இசையுடன் இளைஞர்கள் வருவது இசைத்துறையின் எதிர்காலத்துக்கு நல்லது. அவர்களின் புதுமை எனக்கும் உத்வேகம் அளிக்கிறது," என்றார்.

55
ஏ.ஆர்.ரகுமானுக்கு குவியும் பாராட்டு

உச்சத்தில் இருந்தாலும் மற்ற இசையமைப்பாளர்களை, குறிப்பாக இளம் தலைமுறையினரைப் பாராட்டும் ரகுமானின் பெருந்தன்மை அனைவராலும் பாராட்டப்பட்டது. "ஒவ்வொரு இசையமைப்பாளரிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறது. போட்டி இருக்க வேண்டும், ஆனால் அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஒருவரின் படைப்பை மற்றவர் மதித்து, அதிலிருந்து உத்வேகம் பெறுவது முக்கியம்," என்றார் ரகுமான்.

ரகுமானின் இந்த வார்த்தைகள் இளம் இசையமைப்பாளர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. உலகளவில் இந்திய இசையை உயர்த்திய கலைஞர் ஒருவர் தங்களை அங்கீகரித்து, தங்கள் படைப்புகளைப் பாராட்டியது அவர்களுக்கும் பெருமையே.

Read more Photos on
click me!

Recommended Stories