கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தனுஷின் 3 படம் மூலம் தனது கெரியரை தொடங்கிய அனிருத்துக்கு சினிமாவில் தொட்டதெல்லாம் தங்கம் தான். தொடர்ந்து ஏறுமுகத்துடனே பயணித்து வரும் அனிருத், தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் பணியாற்றிவிட்டார். இதனால் இவருக்கு மவுசும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இவ்வாறு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பான் இந்தியா இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கும் அனிருத்திடம், லைகா நிறுவனம் தங்கள் தயாரிப்பில் ரஜினி நடிக்க உள்ள இரண்டு படங்களுக்கும் இசையமைத்து தருமாறு அவரை அணுகி உள்ளது. இதற்கு அனிருத் ஓகே சொல்லாலும் அதற்கு அவர் கேட்ட சம்பளம் தான் சற்று அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
ரஜினியின் இரண்டு படங்களுக்கும் இசையமைக்க மொத்தமாக 10 கோடி ரூபாய் கேட்டாராம் அனிருத். இதுதான் லைகா நிறுவனத்தினரை சற்று ஜெர்க் அடைய செய்துள்ளது. அனிருத்தின் குருவான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூட ஒரு படத்திற்கு இந்த அளவு சம்பளம் வாங்கியதில்லையாம். அப்படி இருக்கையில் இவருக்கு இவ்வளவு தொகை கொடுத்து கமிட் செய்யுமா லைகா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... சம்பளமே வாங்காமல் அனிருத் இப்படி ஒரு வேலையை செய்கிறாரா..! ஆச்சர்யம் ஆனால் உண்மை