அந்த பதிவில், நான் எனது வீட்டில் உள்ள லிவ்விங் ரூமில் மதியம் அமர்ந்து இருந்தபோது, யாரோ என்னை பார்ப்பது போல் தோன்றியது. உடனடியாக மேலே பார்த்ததும் எதிர்வீட்டு மாடியில் இருவர் கேமரா உடன் என்னை படம்பிடித்து கொண்டிருந்தார்கள். எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது, இதனை எப்படி அனுமதிக்க முடியும். எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது என வெளுத்து வாங்கி இருந்த ஆலியா பட், அதில் மும்பை போலீசையும் டேக் செய்திருந்தார்.