புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, தன்னால் முடிந்தவரை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக வைத்து வாழ்ந்து வந்தவர். குறிப்பாக மக்களை பெரிதும் பாதித்த சென்னை வெள்ளம், கொரோனா பேரிடர், போன்ற காலங்களில் தன்னிடம் உதவி செய்ய கையில் காசு இல்லாவிட்டாலும், வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து சென்னையில் வசிக்கும் பல குழந்தைகளுக்கு பால் மற்றும் உணவுகளை அளித்தவர்.