போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் என தொடர்ந்து கமர்ஷியல் படங்களாக இயக்கி மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது இந்த ஜோடி.
24
இருவரும் திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்ததோடு மட்டுமின்றி கோவில் வளாகத்தில் போட்டோஷூட்டும் நடத்தினர். அப்போது நடிகை நயன்தாரா காலில் செருப்பு அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக இதற்கு மன்னிப்பு கேட்டி விக்னேஷ் சிவன் அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து தற்போது குழந்தைகள் பெற்றுக்கொண்டதன் மூலம் சர்ச்சையில் சிக்கி உள்ளனர். திருமணமான நான்கு மாதத்திலேயே தங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். அவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது சமூக வலைதளங்களில் இதுதான் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
44
இந்நிலையில், திருமணமாகி நான்கே மாதத்தில் பாஸ்ட்டாக குழந்தைக்கு தந்தை ஆன விக்னேஷ் சிவனிடம் அஜித் ரசிகர் ஒருவர் வைத்துள்ள கோரிக்கை இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அதன்படி அவர் கூறியுள்ளதாவது : “இதே மாதிரி பாஸ்ட்டா ஏகே 62 படத்தையும் ரிலீஸ் பண்ணிடுங்க அண்ணா” என பதிவிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.