தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் தனுஷ் தயாரித்த காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் பாப்புலர் ஆன இவர், தற்போது அதிகளவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.