பின்னர் அந்த கதையை ஸ்கிரிப்டாக தயார் செய்து வந்த சிபி, இறுதியாக முழுக்கதையையும் கடந்த சில மாதங்களுக்கு முன் ரஜினியிடன் சொல்லி உள்ளார். ஆனால் ரஜினிக்கு அந்தக் கதை திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால், நோ சொல்லி விட்டாராம். இதனால் கடும் அப்செட்டில் இருந்து வந்துள்ளார் சிபி. அந்த சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தான், அவருக்கு போன் பண்ணி ஆறுதல் கூறி உள்ளார்.