சன் டிவி தொலைக்காட்சியில், பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியல், தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதோடு, 2022 ஆம் ஆண்டுக்கான டி ஆர் பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்த, சீரியல் என பெருமையை பெற்றது.
வில்லியாக பல சீரியல்களில் சைத்ரா ரெட்டி நடித்திருந்தாலும், 'கயல்' சீரியலில் நடித்த பின்னர், இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. இந்த சீரியலில் குடும்பத்தை காப்பாற்ற போராடும் செவிலியர் வேடத்தில் சைத்ரா ரெட்டி நடித்துள்ளார். மேலும் எப்படியும் தன்னிடம் அடிபணிந்து போக வேண்டும், தன்னுடை அண்ணன் குடும்பம் தன்னிடம் கையேந்தி நிற்க வேண்டும் என நினைக்கும், பெரியப்பாவை உதவியை நாடாமல்... எப்படி தன்னுடைய குடும்பத்தை 'கயல்' காப்பாற்றுகிறார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாகவே இவர் சீரியலில் காணப்படாத நிலையில், திடீரென இவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வைரலாக பரவியது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்டு இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்பது போன்ற ஒரு பதிவை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். இப்பதிவு ரசிகர்கள் சிலரை குழப்பமடைய செய்துள்ள போதிலும், இது உண்மையா? என பல ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.