யாஷ் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்த கே.ஜி.எஃப் மற்றும் கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்களின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கன்னட திரையுலகம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த நிறுவனம் தான் ஹோம்பாலே பிலிம்ஸ். மேற்கண்ட இந்த இரண்டு படங்கள் மட்டும் கிட்டத்தட்ட ரூ.2000 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளன.
இதனால் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தங்களது எதிர்கால திட்டம் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3000 கோடியை முதலீடு செய்து பிரம்மாண்ட படங்களை எடுக்க உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்நிறுவனத்தின் கைவசம் டஜன் கணக்கில் படங்கள் உள்ளதாம். குறிப்பாக பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை தயாரித்து வருகின்றனர்.