Trisha Photo: காதல் வென்றுவிட்டது; 41 வயதில் நடிகை த்ரிஷாவுக்கு திடீர் நிச்சயதார்தமா? வைரலாகும் புகைப்படம்!

நடிகை த்ரிஷாவுக்கு திடீர் என நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம், திரிஷா வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் கேப்ஷன் தான்.
 

Actress Trisha suddenly engaged at the age of 41? Rumor Spark in internet mma

மௌனம் பேசியதே படம் மூலமாக, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. இன்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார். கில்லி, ஆதி படங்களில் நடித்த த்ரிஷா மீண்டும் 19 ஆண்டுகளுக்கு பிறகு 'லியோ' படத்தில் நடித்தார். கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, இடையில் சில வருடங்கள் சரியான கதை தேர்வு இல்லாத காரணத்தாலும், கதையின் நாயகியாக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையிலும் தேர்வு செய்து நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், மார்க்கெட்டை இழந்தார்.
 

பொன்னியின் செல்வன்:

இன்னார் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் இவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் அதிகம் கவனிக்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றி த்ரிஷாவை மீண்டும் பிஸியான நடிகையாக மாற்றியது.

யார் அந்த ரம்யா? 5 படத்துக்கும் ஒரே பெயரா? குட் பேட் அக்லீ படத்துக்கும் அதே பேர வச்ச ஆதிக் ரவிச்சந்திரன்!
 


நயன்தாராவுக்கு நிகராக சம்பளம்

சம்பளத்தில் நயன்தாராவுக்கு நிகராக ஒரு படத்திற்கு 8 முதல் 10 கோடி வரை கேட்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக லியோ, மற்றும் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படங்களில் நடித்தார்.  
 

குட் பேட் அக்லீ

இதை தொடர்ந்து இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள குட் பேட் அக்லீ ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இது தவிர, தக் லைஃப், சூர்யா 45 மற்றும் ராம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது 41 வயதாகும் த்ரிஷா இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.

ராமாயணா பார்ட் 1 படத்திற்கு சாய் பல்லவிக்கு ரூ.15 கோடி சம்பளமா? நயன்தாரா, ராஷ்மிகா ஷாக்!
 

நின்றுபோன திருமணம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் த்ரிஷாவிற்கும் பிரபல தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், பிறகு திருமணம் நின்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவ்வப்போது சில காதல் சர்ச்சைகளில் த்ரிஷா சிக்கியபோதும், எதுவும் திருமணம் வரை செல்லவில்லை.
 

திரிஷா வெளியிட்ட புகைப்படம் மற்றும் போட்டோ

இந்த நிலையில் தான் த்ரிஷா பதிவிட்ட புகைப்படம் மற்றும் கேப்ஷன் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுக்கு அவருக்கு நிச்சயதார்தமா என்ற விவாதத்தை தூண்டியிருக்கிறது. பச்சை நிற பட்டுப்புடவையில் தலையில் மல்லிகைப்பூ, மூக்குத்தியில் பேரழகியாக ஜொலிக்கிறார். இந்தப் புகைப்படத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு Love Always Wins என்று கேப்ஷன் குறிப்பிட்டிருக்கிறார். த்ரிஷாவின் இந்தப் புகைப்படத்தை 1000க்கும் அதிகமானோர் ரீ போஸ்ட் செய்ததோடு 21000க்கும் மேற்பட்டோர் லைக்ஸை பெற்றுளளது.

இது போட்டோஷுட்டுக்காக எடுக்கப்பட்ட புகைப்படமாகவோ? அல்லது மூவி ஷூட்டுக்காக எடுக்கப்பட்ட புகைப்படமாகவோ இருக்கலாம் என்பது ஒரு தரப்பு ரசிகர்களின் கருத்தாக இருந்தாலும், ஒரு சிலர் உங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா என்கிற கேள்வியோடு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

காசுக்காக பொய் சொல்கிறாரா த்ரிஷா? பாடகர் கருத்தால் பரபரப்பு!

Latest Videos

vuukle one pixel image
click me!