நேற்றைய தினம் வரலட்சுமி நோம்பு எடுக்கப்பட்ட நிலையில், நடிகை சினேகா தன்னுடை வீட்டில் நடந்த பூஜைக்கு பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்து கொண்டாடியுள்ளார் இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா, பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக தன்னுடைய குடும்பத்தை கவனித்து வருகிறார்.
27
இவர்களின் காதலுக்கு அடையாளமாக விகான் என்கிற மகனும் ஆத்யாந்தா என்கிற அழகிய மகளும் உள்ளனர். அவ்வப்போது தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் சினேகா - பிரசன்னா ஜோடி.
சமீபத்தில் கூட, தன்னுடைய தந்தை பிறந்தநாளை, ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் மிகவும் சிறப்பாக கொண்டாடி, தந்தைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் சினேகா.
47
அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு, நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை வழங்கியபோது... எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக பலரும் சினேகாவின் இந்த செயலை வெகுவாக பாராட்டி இருந்தனர்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும், வரலட்சுமி நோம்பு எடுப்பதை வழக்கமாக வைத்துள்ள சினேகா இந்த ஆண்டு, சில பிரபலங்களும் சினேகா வீட்டில் நடந்த வரலட்சுமி பூஜையில் கலந்த கொண்டுள்ளனர்.
67
அந்த வகையில் நடிகை ப்ரீத்தா ஹரி, சரண்யா பொன்வண்ணன், இயக்குனர் பாலாவின் முன்னாள் மனைவி முத்துமலர் உள்ளிட்ட பலர் சினேகா வீட்டு வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இதுகுறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகை சினேகா தன்னுடைய மகள் பிறந்ததற்கு பின்னர்... நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஷாட் பூட் 3 படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.