மலையாள நடிகையான நித்யா மேனன் தமிழில் நானி நடிப்பில் வெளியான வெப்பம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து காஞ்சனா 2, மணிரத்னத்தின் ஓகே கண்மனி போன்ற படங்களில் நடித்த இவர் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.
இதனிடையே சமீபத்தில் நடிகை நித்யா மேனன் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதன்பின் அது உண்மையில்லை என விளக்கம் அளித்தார் நித்யா மேனன். இந்த செய்தி வைரலாக பரவியதற்கு சந்தோஷ் வர்க்கி என்கிற இளைஞர் தான் காரணமாம். அவர்தான் நித்யா மேனனை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பேட்டி அளித்திருந்தார்.
இது வைரலானதை அடுத்து, நடிகை நித்யா மேனன் அந்த இளைஞரால் தான் 6 வருடங்களாக டார்ச்சர் அனுபவித்து வருவதாக கூறி இருக்கிறார். தான் பலமுறை அவர் அழைக்கும் மொபைல் எண்ணை பிளாக் செய்தாலும், வேறு வேறு எண்களில் இருந்து அழைத்து அவன் தொல்லை தருவதாக கூறி உள்ளார். இதுவரை அவனிடமிருந்து வந்த 30 மொபைல் எண்களை தான் பிளாக் செய்துள்ளதாக நித்யா மேனன் தெரிவித்துள்ளார். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... சலசலப்புக்கு மத்தியிலும்... வெற்றிமாறன் படத்துக்காக சேர்ந்து பணியாற்றிய சந்தோஷ் நாராயணன் - அறிவு கூட்டணி