கோலிவுட்டில் ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் கடந்த 2000-ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அமர்களம் படத்தில் ஜோடியாக நடித்தபோது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித்தால் ஷாலினியின் கையில் எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட, அப்போது ஷாலினி மீது அஜித் காட்டிய அக்கறை நாளடைவில் காதலாக மாறியது.