சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு குடும்பத்துடன் திடீர் விசிட் அடித்த சாய் பல்லவி! ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு!

Published : Sep 05, 2022, 07:13 PM IST

பிரபல நடிகை சாய் பல்லவி, தன்னுடைய குடும்பத்துடன் திடீர் என சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலுக்கு விசிட் அடித்து, சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
16
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு குடும்பத்துடன் திடீர் விசிட் அடித்த சாய் பல்லவி! ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு!

அதிக மேக்கப் மற்றும் துளியும் கவர்ச்சி காட்டாமல், தொடர்ந்து தரமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளின் ஒருவர் சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் அறிமுகமான முதல் படமான 'பிரேமம்' படத்தின் மூலமே இவருக்கு, மலையாள திரையுலகை தாண்டி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழி ரசிகர்களும் அதிகரித்து விட்டனர்.

26

எனவே, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் படு பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி, தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்காமல், தான் நடிக்கும் படங்களின் கதை மற்றும் கதாபாத்திரத்தில், வித்யாசமானதாகவும் தன்னுடைய கதாபாத்திரம் அழுத்தமானதாக இருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

மேலும் செய்திகள்: 'ராவணன்' பட காட்சியை வெளியிட்டு... இயக்குனர் மணிரத்னத்துக்கு பல்லாயிரம் நன்றிகள் சொன்ன நடிகர் விக்ரம்..!
 

36

அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கார்கி'படம் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆசிரியையாக நடித்திருந்த சாய் பல்லவி, சூழ்நிலை காரணமாக தன்னுடைய தந்தை பாலியல் வழக்கில் மாட்டிக்கொள்ள, அவரை அதிலிருந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எப்படி வெளியே கொண்டு வருகிறார் என்பதை... சினிமா தனம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை குவித்தார்.

46

இதை தொடர்ந்து தற்போது இவரது கைவசம் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட சில படங்கள் உள்ள நிலையில், திடீரென குடும்பத்துடன் நடராஜர் கோவிலுக்கு விசிட் அடித்துள்ளார் சாய்பல்லவி.

மேலும் செய்திகள்: வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு டாட்டா ! புதிய சேனலில்... காம்பேக் கொடுக்க தயாரான ஆல்யா மானசா! வெளியான தகவல்!
 

56

இவர் கோவிலுக்கு வந்த செய்தி அங்கு தீயாக பரவிய நிலையில், ஏராளமான ரசிகர்கள் கோவிலில் கூடினர். இதனால் அங்கு சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சாய் பல்லவி தன்னுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டவர்கள் அனைவருடனும் மிகவும் பொறுமையாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.

66

தன்னுடைய, அம்மா, அப்பா, தங்கை ஆகியோருடன் சாமி தரிசனம் செய்த பின்னர்... போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து தீர்த்த பிரசாதங்கள் வாங்கி கொண்டு கோவிலில் இருந்து சென்றார். இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: பட்டு சேலை கட்டிய அழகு சிலையாய்.. முகம் காட்டாமல்.. பின்னழகை வளையவளைய காட்டிய ரம்யா பாண்டியன்.. போட்டோஸ்!
 

Read more Photos on
click me!

Recommended Stories