விஜய் டிவி சீரியலில், ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரில், செம்பா என்கிற வேலைக்கார பெண் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஆல்யா மானசா. இந்த சீரியலில் இவருக்கு ரீல் ஜோடியாக நடித்த சஞ்சீவ் - ஆல்யா இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2019-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனதும் ஆல்யா கர்ப்பமானதால் சிறிது காலம் சீரியலில் இருந்து விலகியே இருந்தார்.