பட்டு சேலை கட்டிய அழகு சிலையாய்.. முகம் காட்டாமல்.. பின்னழகை வளையவளைய காட்டிய ரம்யா பாண்டியன்.. போட்டோஸ்!

First Published Sep 5, 2022, 3:59 PM IST

நடிகை ரம்யா பாண்டியன் பிரபல கோவிலில் இருந்தபடி... சேலை அழகில் முகத்தை காட்டாமல் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

ரம்யா பாண்டியன் மீண்டும் சேலை அழகில் புகைப்படம் வெளியிட்டு,  ரசிகர்கள் மனதை வருடி வருகிறார். அந்த வகையில் தற்போது பட்டு சேலையில் முகம் காட்டாமல் இவர் வெளியிட்ட அழகிய போட்டோஸ் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

'ஜோக்கர்' படத்தின் மூலம்ம், ரம்யா பாண்டியனுக்கு சிறந்த அறிமுகம் கிடைத்தாலும்... அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. பொதுவாக வெள்ளித்திரை நடிகைகள் பலரும், சின்னத்திரையில் நுழைய தயக்கம் காட்டும் நிலையில் கூட, வெள்ளித்திரையில் கால் பதித்த பின்னர் மிகவும் தைரியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையானார் ரம்யா.

மேலும் செய்திகள்: மூன்றாவது முறையாக காதலியை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்த குக் வித் கோமாளி புகழ்! வைரலாகும் புகைப்படம்!
 

இதை தொடர்ந்து, மீண்டும் விஜய் டிவி-யில் இருந்து வந்த, பிக்பாஸ் அழைப்பை ஏற்று கொண்டு... மிகவும் திறமையாக இந்த நிகழ்ச்சியில் விளையாடிய ரம்யா பாண்டியன், 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த பின்னர் கடைசி நாளில் தான் வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையேடு, அடுத்தடுத்த படங்களில்  நடிக்க துவங்கினர் அந்த வகையில், சூர்யா தயாரிப்பில் வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் செய்திகள்: நயன்தாரா, அஜித், ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர் - நடிகைகள் உதவியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா
 

தற்போது கூட, வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்று கொள்ளாமல்... தொடர்ந்து தரமான கதைகளையே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என, தன்னுடைய மனதிற்கு நிறைவான கதையும் கதாபாத்திரத்தையும் மட்டுமே ஏற்று நடித்து வருகிறார் . 

அந்த வகையில் தமிழில் 'இடும்பன் காரி' எகிற படத்திலும், மலையாளத்தில் மமூட்டியுடன் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்:டூ பீஸில் பார்த்தவுடன் பக்கென்றாக்கும் பாலிவுட் பிரபலம்...கிக் போட்டோஸ் இதோ !
 

தொடர்ந்து தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா, தமிழகத்தின் பிரமாண்ட கோவில்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பட்டு புடவையில், முகம் காட்டாமல் பின்னகழை மட்டுமே காட்டி வளைய வளைய போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்ப்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. 

click me!