நடிகர் விஜய் ஹீரோவாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் எடிட்டர் கவுதம் ராஜு காலமானார்

First Published Jul 6, 2022, 9:25 AM IST

Goutham Raju : தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு கவுதம் ராஜு எடிட்டராக பணியாற்றி உள்ளார். 

பிரபல திரைப்பட எடிட்டர் கவுதம் ராஜு காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று அதிகாலை அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 68. கவுதம் ராஜுவின் மரணத்தால் திரையுலக பிரபலங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... அந்த ஒரு காரணத்துக்காக தந்தையை பழிவாங்கிய லோகேஷ் கனகராஜ் - வெளியான சீக்ரெட் தகவல்

கடந்த 1954 ஆம் ஆண்டு பிறந்த கவுதம் ராஜு, 1982ல் 'தேக் கபர் ரக் நபார்' என்கிற ஒடியா மொழி படம் மூலம் எடிட்டராக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் எடிட்டராக பணியாற்றினார். 

இதையும் படியுங்கள்... ‘மாமன்னன்’ படத்தில் மாரி செல்வராஜ் வைத்த எதிர்பாரா டுவிஸ்ட் - கதையின் நாயகன் உதயநிதி இல்லையாம்... இவர்தானாம்!

தமிழில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், முதன்முதலாக நாயகனாக நடித்த நாளைய தீர்ப்பு படத்துக்கு எடிட்டராக பணியாற்றியதும் கவுதம் ராஜு தான். குறிப்பாக இவர் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார். ‘கைதி நம்பர் 150’, ‘ஆதி’, ‘கப்பர்சிங்’, ‘கிக்’, ‘கோபாலா கோபாலா’, ‘பத்ரிநாத்’ என இவரின் வெற்றிப்படங்கள் வரிசை நீண்டுகொண்டே செல்லும். 

இதையும் படியுங்கள்... படத்தில் மட்டும் தான் பாச மழையா? அப்பா - அம்மா மணிவிழாவில் கலந்து கொள்ளாத விஜய்! மனதை பாரமாக்கிய போட்டோஸ்!

அந்த அளவுக்கு சக்சஸ்புல்லான எடிட்டராக வலம் வந்துள்ளார் கவுதம் ராஜு. ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'ஆதி' படத்துக்காக இவர் சிறந்த எடிட்டருக்கான தெலுங்கு திரையுலகின் உயரிய விருதான நந்தி விருதையும் பெற்றார். அவரது மரணம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

click me!