2001-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படம் தான், சூர்யாவுக்குள் இருக்கும் ஒரு சிறந்த நடிகரை வெளி உலகத்துக்கு காட்டியது. இதனால் அனைவரது பாராட்டையும் பெற்றார். நந்தா திரைப்படத்துக்கு பின்னர் வரிசையாக வெளிவந்த காக்க காக்க, ஆயுத எழுத்து, மெளனம் பேசியதே, கஜினி, அயன், சிங்கம், ஆறு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை சூர்யாவுக்கு பெற்றுக் கொடுத்தது.