69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் ஜெய் பீம் படத்துக்கு ஒரு விருதுகூட கிடைக்காததால் பிரபல தெலுங்கு நடிகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
69-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கு மற்றும் இந்தி படங்கள் தான் ஆதிக்கம் செலுத்தியதோடு, விருதுகளையும் அள்ளிச்சென்றன. அதன்படி ஆர்.ஆர்.ஆர், கங்குபாய் கத்தியவாடி, சர்தார் உதம் ஆகிய படங்களுக்கு அதிகப்படியான விருதுகள் கிடைத்தன. தமிழில் கடைசி விவசாயி படத்துக்கு இரண்டு விருதுகளும், இரவின் நிழல் படத்துக்கு ஒரு தேசிய விருது மட்டும் கிடைத்தது.
24
Karnan, Jai Bhim, Sarpatta Parambarai
தமிழில் சூர்யாவின் ஜெய் பீம், தனுஷின் கர்ணன், பா.இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை என சில தரமான படங்கள் போட்டியிட்டும் அதற்கு ஒரு விருது கூட வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் தேசிய விருதுகள் வழங்கப்படுவதில் அரசியல் தலையீடு உள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், ஜெய் பீம் படத்துக்கு ஒரு விருது கூட கிடைக்காதது குறித்து பிரபல தெலுங்கு நடிகர் நானியும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்கிராமில் பதிவிட்டுள்ள அவர், ஜெய் பீம் என ஹேஷ்டேக் போட்டு, மனமுடைந்து போனதாக எமோஜி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நானியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
44
Telugu actor Nani
அதேபோல் மற்றொரு பதிவில், தேசிய விருது வென்றவர்களை பாராட்டி பதிவிட்டுள்ளார். தெலுங்கு சினிமா உயர பறப்பதாகவும், தேசிய விருதுகளை வென்று குவித்த ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா மற்றும் உப்பென்னா படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜுன் வென்றுள்ளது கூடுதல் ஸ்பெஷல் என குறிப்பிட்டுள்ளார்.