மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ரூ.500 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், வந்தியத்தேவனாக கார்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.