உலக நாயகன் கமல்ஹாசன் இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்து தொழில்நுட்ப ரீதியாகவும், திரைக்கதை ரீதியாகவும் பல சவால்களை சந்தித்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் "ஆளவந்தான்". சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பே அப்படத்தில் "பேஸ் மாஸ்கிங்" டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் உலக நாயகன் கமல்ஹாசன் எழுதிய "தாயம்" என்கின்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு தான் இப்படம் உருவாக்கப்பட்டது.