நடிகை சௌந்தர்யா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், இவரின் அறிமுகம் கன்னட திரைப்படம் தான். 'கந்தர்வா' என்ற படத்தின் மூலம் கடந்த 1992 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார்.
211
இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் கன்னடத்தில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு பட இயக்குனர்கள் கவனமும் இவர் மீது விழ, தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'பொன்னுமணி' என்கிற படத்தின் மூலம் 1993 ஆம் ஆண்டு அறிமுகமானார்.
அதேபோல் தமிழில் இவர் நடித்த முத்துக்காளை, அருணாச்சலம், படையப்பா, சொக்கத்தங்கம்,போன்ற படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத படங்களாக உள்ளன.
611
ஒரு மருத்துவராகும் கனவோடு தன்னுடைய எம்பிபிஎஸ் படிப்பை படிக்க துவங்கிய இவர், பின்னர் பட வாய்ப்புகளில் பிஸியாக மாறியதால் தன்னுடைய எம்பிபிஎஸ் படிப்பை முதல் வருடத்திலேயே நிறுத்தி விட்டு முழு நேர ஹீரோயினாக மாறினார்.
முன்னணி நடிகையாக இருந்த சௌந்தர்யா 2003 ஆம் ஆண்டு அவருடைய தாய் வழி உறவினர்களில் ஒருவரான தொழிலதிபர் ஜி எஸ் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
811
நடிப்பை தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டி தந்த சௌந்தர்யா, கடந்த 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள விமானத்தில் சென்றபோது அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சௌந்தர்யா பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறக்கும்போது கர்ப்பமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சௌந்தர்யா இழப்பு தற்போது வரை ரசிகர்கள் மற்றும் திரையுலகினரால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்து வரும் நிலையில், பார்ப்பதற்கு இவரை போலவே ஒரு பெண் வீடியோக்களில் தோன்றி அனைவரையும் அசர வைத்து வருகிறார்.
1011
அவரைப் பார்த்து ரசிகர்கள் பலர் சௌந்தர்யாவின் மறுபிறவியா? என்பது போல் கேள்விகளை எழுப்பி விடுகிறார்கள். சவுந்தர்யா போலவே இருக்கும் சித்ரா என்கிற இந்த பெண் சமூக வலைத்தளத்தில் சௌந்தர்யாவின் பாடல்களை ரீல் செய்து வெளியிடும் வீடியோக்கள் மற்றும் சௌந்தர்யா போலவே வெளியிடும் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
நடிப்பு மீதான ஆசையில் இந்தப் பெண் அடுத்தடுத்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.