நடிகை சௌந்தர்யா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், இவரின் அறிமுகம் கன்னட திரைப்படம் தான். 'கந்தர்வா' என்ற படத்தின் மூலம் கடந்த 1992 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார்.
இவர் நடிப்பில் வெளியான முதல் தமிழ் படமே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இது இவரின் திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதேபோல் தமிழில் இவர் நடித்த முத்துக்காளை, அருணாச்சலம், படையப்பா, சொக்கத்தங்கம்,போன்ற படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத படங்களாக உள்ளன.
முன்னணி நடிகையாக இருந்த சௌந்தர்யா 2003 ஆம் ஆண்டு அவருடைய தாய் வழி உறவினர்களில் ஒருவரான தொழிலதிபர் ஜி எஸ் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த விபத்தில் சௌந்தர்யா பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறக்கும்போது கர்ப்பமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சௌந்தர்யா இழப்பு தற்போது வரை ரசிகர்கள் மற்றும் திரையுலகினரால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்து வரும் நிலையில், பார்ப்பதற்கு இவரை போலவே ஒரு பெண் வீடியோக்களில் தோன்றி அனைவரையும் அசர வைத்து வருகிறார்.
நடிப்பு மீதான ஆசையில் இந்தப் பெண் அடுத்தடுத்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.