பாகுபலி நடிகர் ராணா மீது பாய்ந்த கிரிமினல் வழக்கு! ரவுடிகளை ஏவி மிரட்டியதாக பரபரப்பு புகார்..!

First Published Feb 12, 2023, 2:06 PM IST

நடிகர் ராணா டகுபதி மற்றும் அவரின் தந்தை ஆகியோர் தனக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தொழிலதிபர் பிரமோத் என்பவர் கிரிமினல் வழக்கு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா மற்றும் அவருடைய தந்தை சுரேஷ் பாபு ஆகியோர், சட்ட சிக்கலில் தற்போது சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ராணா மற்றும் அவரின் தந்தை மீது, தொழிலதிபர் பிரமோத் குமார் என்பவர் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது, " கடந்த 2014 ஆம் ஆண்டு, தனக்கு சொந்தமான இடத்தில ஹோட்டல் அமைக்க போவதாக கூறி ராணா மற்றும் அவரின் தந்தை தன்னிடம் குத்தகைக்குஎடுத்தனர் .
 

 அவர்களுக்கு நான் எழுதி கொடுத்த குத்தகைக்கான காலம் 2018 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்ட நிலையில்... சுரேஷ் பாபு தனக்கு சொந்தமான அந்த இடத்தை 18 கோடிக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார். 

42-வது படத்திற்காக வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் சூர்யா! வைரலாகும் வீடியோ..!

ஆனால் ராணா மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் குத்தகைக்கு எடுத்த நிலத்தை திரும்ப ஒப்படைக்க முடியாது என பிரச்சனை  செய்துள்ளனர். இதனால் பிரமோத் தன்னுடைய நிலத்தை விற்பனை செய்யமுடியாமல் போனது.
 

இதுகுறித்து கேட்டால், தன்னை அடியாட்களை வைத்து ராணாவும் அவரின் தந்தையும், அந்த இடத்தை தங்களிடம் ஒப்படைத்துவிட கூறி அடியாட்களை வைத்து கொன்றுவிடுவேன் என மிரட்டுவகாகவும், இது குறித்து ஏற்கனவே பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தகதவென ஜொலிக்கும் கருப்பு நிற டாப்பில்... இடையழகை காட்டி ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை சினேகா!

இந்த புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது.... வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் ராணா மற்றும் அவரின் தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் நேரில் ஆஜராகவேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
 

நடிகர் ராணா கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கில்  என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்துக்கே, சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் பேர் விருதை பெற்றார். இதை தொடர்ந்து தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்திருந்த 'பாகுபலி' திரைப்படம் இவரை உலகம் முழுவதும் அறிய செய்த படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானின் ரொமான்ஸ் பாடலாக வெளியான 'பாடாத பாட்டெல்லாம்' லிரிக்கல் வீடியோ!

click me!