பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா இரண்டு நிலைகளில் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவிகளை வழங்குகிறது:
முதல் பிரசவம் (முதல் குழந்தை): முதல் குழந்தைக்கு விண்ணப்பிக்கும் போது மொத்தம் 5,000 ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.
முதல் தவணை ரூ.3,000: கர்ப்பத்தை ஆரம்பத்திலேயே பதிவு செய்து, குறைந்தது ஒருமுறை மருத்துவப் பரிசோதனை (Antenatal Check-up) செய்த பின் வழங்கப்படும்.
இரண்டாவது தவணை ரூ.2,000 குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்டு, 14 வாரங்களுக்குள் செலுத்தப்பட வேண்டிய முதற்கட்டத் தடுப்பூசிகள் அனைத்தும் போட்டு முடித்த பின் வழங்கப்படும்.
இரண்டாவது பிரசவம் (பெண் குழந்தையாக இருந்தால்): பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதை ஊக்குவிக்கும் வகையில், இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாகப் பிறந்தால், ஒரே தவணையாக 6,000 ரூபாய் நேரடியாக வழங்கப்படுகிறது.