புதிய சட்டத் திருத்தத்தின்படி, டிக்கெட் இல்லாத பயணம் மட்டுமின்றி பல்வேறு விதிமீறல்களுக்கான அபராதங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இது குறித்த பட்டியலை கீழே பார்ப்போம்.
பெண்கள் பெட்டி விதிமீறல்: ரயில்களில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஆண்கள் பயணித்தால், இனி 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக ரயிலில் இருந்து இறக்கிவிடவும் ரயில்வே ஊழியர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இதற்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அபராத தொகை 5 மடங்கு அதிகமாகியுள்ளது.
போலி டிக்கெட்டில் பயணித்தால்: வேறொருவரின் பெயரில் உள்ள டிக்கெட்டைப் பயன்படுத்தி பயணித்தால், அந்த டிக்கெட் பறிமுதல் செய்யப்படுவதோடு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அனுமதியின்றி வியாபாரம்: ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அனுமதியின்றி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதே தவறை மீண்டும் செய்தால் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு: ரயில் நிலையங்களிலோ அல்லது ரயிலின் உள்ளேயோ ஆபாசமாகப் பேசுவது அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
ஆபத்தான பொருட்கள்: ரயில்களில் தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் அல்லது ஆபத்தான பொருட்களை எடுத்துச் சென்றால் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.