இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விதிகளை தெரிந்துகொள்ளாமல் பலரும் பொருட்களை வாங்கி வருகிறார்கள். தங்கம், லேப்டாப் போன்ற பொருட்களை கொண்டு வருவதற்கான சுங்க விதிகள் விளக்கப்பட்டுள்ளன.
இந்திய சுங்க விதிகளின்படி, துபாயிலிருந்து இந்தியாவுக்கு பயணம் செய்யும் போது எவ்வளவு தங்கம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை சுங்க வரி இல்லாமல் கொண்டு வரலாம் பலருக்கும் குழப்பம் உள்ளது. இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஷாப்பிங் செய்வோரும் அதிகம். ஆனால் சரியான விதிகளை தெரிந்துகொள்ளாமல் பொருட்களை கொண்டு வந்தால், விமான நிலையத்தில் கூடுதல் செலவு ஏற்படும்.
25
தங்கம் எவ்வளவு கொண்டு வரலாம்?
தங்கம் விதிகளைப் பார்க்கும்போது, சமீபத்தில் அரசு புதிய சுங்க விதிமுறைகளின்படி, ஒரு வருடத்துக்கு மேல் துபாயில் வசித்தவர்கள் என்றால், ஆண்கள் 20 கிராம் வரை மற்றும் பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை இந்தியாவுக்கு வரி இல்லாமல் கொண்டு வரலாம். இந்த சலுகை நகைகளுக்கு மட்டுமே பொருந்தும். தங்க கட்டி அல்லது நாணயங்கள் மீது வரி விதிக்கப்படும்.
35
துபாய்க்கு செல்லும் இந்தியர்கள்
ஆனால், துபாய்க்கு குறுகிய கால பயணம் (ஒரு வாரம், இரண்டு வாரம், ஒரு மாதம் போன்றவை) சென்றவர்கள் வேறு விதிகளை பின்பற்ற வேண்டும். இவர்கள் ரூ.75,000 மதிப்புக்குள் உள்ள பொருட்களை தனிப்பட்ட பயன்பாட்டுக்காக கொண்டு வர அனுமதி உண்டு. இதில் பெரும்பாலும் பயன்படுத்திய நகைகள் அல்லது சிறிய ஷாப்பிங் பொருட்களே சேர்க்கப்படும். வணிக நோக்கில் வாங்கப்படும் பொருட்களுக்கு இந்த சலுகை இல்லை.
முன்னதாக, வெளிநாடுகளில் இருந்து டியூட்டி-ஃப்ரீ-ஆக கொண்டு வரக்கூடிய பொருட்களின் மதிப்பு ரூ.50,000 ஆக இருந்தது. தற்போது அதை ரூ.75,000 ஆக உயர்த்தியுள்ளனர். மேலும், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான வரி இல்லாத வரம்பு ரூ.15,000-இல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்குகிறது.
55
துபாயிலிருந்து லேப்டாப் கொண்டு வரலாமா?
லேப்டாப் பற்றி பார்க்கும்போது, ஒரு பயணி ஒரு லேப்டாப்பை வரி இல்லாமல் கொண்டு வரலாம். இதற்கு ரூ.75,000 வரம்பு பொருந்தாது. டிஜிட்டல் பேக்கேஜ் அறிவிப்பு, முன்கூட்டியே அறிவிப்பு போன்ற வசதிகள் விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தங்க கட்டிகள், கார்கள், டிவி, மது, புகையிலை பொருட்கள் மீது சுங்க வரி கட்டாயம். இந்த புதிய தொகுப்பு விதிகள் 2026 பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வந்துள்ளதால், பயணிகள் முன்கூட்டியே விதிகளை தெரிந்துகொள்வது அவசியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.