இந்திய ரயில்வே பயண விதிகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. ரயிலில் பயணம் செய்யும் முன் இந்த மாற்றங்களை ரயிலில் பயணிக்கும் பயணிகள் தெரிந்து கொள்வது அவசியம். ரயில் டிக்கெட் முன்பதிவு முதல் லக்கேஜ் வரை பல மாற்றங்கள் அடங்கும்.
இந்திய இரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி பயணிகளைக் கருத்தில் கொண்டு, 2025-26 முதல் ரயில் பயண விதிகளில் பல முக்கிய மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளது. கட்டண உயர்வுடன் கூடுதலாக, டிக்கெட் முன்பதிவு, தட்கல், காத்திருப்பு பட்டியல், அடையாள சான்று, லக்கேஜ் விதிகள் என பல புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. வரும் நாட்களில் ரயிலில் பயணம் செய்து இருப்பவர்கள் இந்த விதிகளை அறிந்து கொள்வது அவசியம்.
27
ஐஆர்சிடிசி இணையதளம்
தட்கல் டிக்கெட் முறையிலான மோசடிகளை தடுக்க, ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் ஆப்பில் டிக்கெட் முன்பதிவு செய்ய, உங்கள் கணக்கு ஆதார்-க்கு இணைப்பு செய்யப்பட வேண்டும். ஆதார் சரிபார்ப்பு செய்யாத ஐஆர்சிடிசி கணக்குகளில் தட்கல் விருப்பம் காணப்படாது. இதனால் உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட் கிடைப்பது எளிதாகும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
37
தட்கல் முன்பதிவில் புதிய மாற்றங்கள்
தட்கல் முன்பதிவுக்கு மேலும் ஒரு புதிய விதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. தட்கல் சாளரம் திறந்ததும், முதல் 30 நிமிட முகவர்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதி இல்லை. ஏசி வகுப்புகளுக்கு காலை 10.30 மணி முதல் முகவர் முன்பதிவு தொடங்கும்; ஏசி அல்லாத வகுப்புகளுக்கு 11.30 மணி முதல் அனுமதி வழங்கப்படும். இதனால் பொதுப் பயணிகளுக்கு முன்னுரிமை கிடைக்கும்.
உறுதி செய்யப்பட்ட டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய முடியாது என்றும் ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. கவுண்டர் டிக்கெட் ஆக இருந்தாலும், ஐஆர்சிடிசி ஆன்லைன் புக்கிங் ஆக இருந்தாலும், டிக்கெட் உறுதி ஆகவில்லை என்றால் பயணம் செய்தால் அபராதம் அல்லது ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட வாய்ப்பு உள்ளது.
57
காத்திருப்பு டிக்கெட்
காத்திருப்பு டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால், முன்பதிவு விளக்கப்படம் தயாரிக்கும் நேரம் மேலும் மாற்றப்பட்டுள்ளது. இப்போது, ரயில் ஆரம்ப நிலையத்திலிருந்து புறப்படும் நேரத்திற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே விளக்கப்படம் தயாரிக்கப்படும். இதனால் காத்திருக்கும் பட்டியல் கிளியர் ஆனதா இல்லையா என்பதை பயணிகள் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.
67
புதிய லக்கேஜ் விதிகள்
புதிய லக்கேஜ் விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. கோச் அடிப்படையில் சுமந்து செல்லும் லக்கேஜ் எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் ஏசி - 70 கிலோ, இரண்டாவது ஏசி - 50 கிலோ, மூன்றாம் ஏசி / ஸ்லீப்பர் - 40 கிலோ, ஜெனரல் கோச் - 30 கிலோ வரை மட்டுமே அனுமதி. விமான பயண விதிகளைப் போலவே இது கடைபிடிக்கப்படும்.
77
புதிய ரயில்வே விதிகள்
2026 பிப்ரவரி 4 முதல் சில பகுதிகளில் பயணிகளுக்கு அசல் அடையாள அட்டை கட்டாயம். குறிப்பாக, பங்களாதேஷ் மற்றும் நேபாள எல்லையை ஒட்டிய சர்வதேச எல்லைப் பகுதிகளில் இயங்கும் ரயில்களில் இது கட்டாயமாகும். மேலும், போர்டிங் ஸ்டேஷன்-ல் ரயில்-ஐ ஏறவில்லை என்றால், அந்த இருக்கை ஆர்ஏசி அல்லது காத்திருப்பு டிக்கெட் பயணிகளுக்கு உடனடியாக ஒதுக்கப்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.