16 வயது சிறுமியை காமம் தீர கற்பழித்த காதலன்..! தலையில் கல்லைப்போட்டு கொடூரக் கொலை..!

By Manikandan S R SFirst Published Jan 4, 2020, 11:23 AM IST
Highlights

திருச்சி அருகே 11 வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை காதலன் கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் கவிப்ரியா(16). அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரும் திருச்சி அருகே இருக்கும் இனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மதிக்குமார்(22) என்கிற வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 31 ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கவிப்ரியா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.

ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் இருந்துள்ளது. காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே திருச்சி அருகே இருக்கும் ஒரு காட்டுப்பகுதியில் இளம்பெண் ஒருவர் கை,கால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், அது கவிப்ரியா என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலைவழக்கு பதிவு செய்த காவலர்கள், சந்தேகத்தின் பேரில் கவிப்ரியாவின் காதலர் மதிக்குமாரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது அவரை கற்பழித்து கொலை செய்த தகவலை மதிக்குமார் கூறியிருக்கிறார். அவர் அளித்த வாக்குமூலத்தில், வேறொரு வாலிபருடன் கவிப்ரியா பழகி வந்ததை நிறுத்துமாறு தான் கூறியதாகவும் ஆனால் அதை அவர் கேட்கவில்லை என்றார். சம்பவத்தன்று காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற போது அது சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மதிக்குமார், கவிப்ரியாவை தாக்கி கொடூரமாக கற்பழித்துள்ளார். பின் அருகே இருந்த கல்லை எடுத்து மாணவியின் தலையில் போட்டு கொலை செய்திருக்கிறார்.

கவிப்ரியா உயிரிழந்ததும் அவரது துப்பட்டாவை எடுத்து முகத்தை சுற்றி கட்டிவிட்டு அங்கிருந்து மதிக்குமார் தப்பிச் சென்றுள்ளார். கொலைவழக்கு பதிவு செய்த காவலர்கள், மதிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொலையில் அவரது நண்பர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்க இருக்கக்கூடும் என காவலர்கள் சந்தேகிப்பதால், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

click me!