இதுக்கெல்லாமா இப்படி செய்வாங்க.. புருஷன் என்றுகூட பாராமல் ‘அந்த’ இடத்தில் ஆசிட் ஊற்றிய கொடூர மனைவி.!

By vinoth kumarFirst Published Nov 6, 2021, 8:24 PM IST
Highlights

திருச்சி கோட்டை கீழ தேவதானத்தை சேர்ந்தவர் எழிலரசன்(42). தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி(34) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாட்டால் காயத்ரி குழந்தைகளுடன் திருவெறும்பூர் கைலாஷ் நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

தீபாவளி செலவுக்கு பணம் தாராத கணவர் மீது மனைவியை ஆசிட் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி கோட்டை கீழ தேவதானத்தை சேர்ந்தவர் எழிலரசன்(42). தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி(34) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாட்டால் காயத்ரி குழந்தைகளுடன் திருவெறும்பூர் கைலாஷ் நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதையும் படிங்க;- உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நைட்டுக்கு நான் வரவா.. கல்லூரி மாணவியுடன் ஆபாச சாட்டிங் செய்த பேராசிரியர்.!

எழிலரசனுக்கு கீழேதேவதானம் பகுதியில் சொந்தமாக வீடுகள் உள்ளன. அதை வாடகைக்கு விட்டுள்ளார். மனைவியை பிரிந்திருந்தாலும் மாதந்தோறும் வாடகை பணத்தை குழந்தைகளுக்காக மனைவிக்கு அனுப்புவாராம். இந்த மாத வாடகை பணத்தை அனுப்பவில்லை. இதனால், காயத்ரி தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் மாலை கீழே தேவதானம் சென்று குடியிருப்போரிடம் வாடகை கேட்டுள்ளார். அவர்கள் கணவரிடம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த காயத்ரி கணவன் வீட்டுக்கு சென்று பணத்தை கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. 

இதையும் படிங்க;- 30 வயது வாலிபருடன் 40 வயது பெண் லாட்ஜில் இரவு முழுவதும் உல்லாசம்.. இறுதியில் கள்ளக்காதல் ஜோடி எடுத்த முடிவு.!

ஆத்திரமடைந்த காயத்ரி அந்த வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து கணவரின் இடுப்புக்கு கீழே ஊற்றி விட்டு தப்பி ஓடி விட்டார்.  இதில் தொடை வெந்து வலி தாங்க முடியாமல் எழிலரசன் அலறி துடித்துள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அவர் வேலை செய்யும் அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள காயத்ரியை தேடி வருகின்றனர். கணவர் மீது மனைவியை ஆசிட் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- நடத்தையில் தீராத சந்தேகம்.. நடுஇரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி.. கணவர் செய்த பகீர் காரியம்..!

click me!