கடன் வாங்க சென்ற இடத்தில் பெண் ஜூனியர் ஆர்டிஸ்ட் கதற கதற பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இக்கொடூரம் அரங்கேறியுள்ளது.
கடன் வாங்க சென்ற இடத்தில் பெண் ஜூனியர் ஆர்டிஸ்ட் கதற கதற பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இக்கொடூரம் அரங்கேறியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன அதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, ஆறு மாதக் குழந்தை முதல் 60 வயது மூதாட்டிகள் வரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் இளம் பெண்களை காதலிப்பது போல நடித்து அவளை கற்பழித்து மோசடி செய்வது,காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, காதலித்து திருமணம் செய்துகொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது, கணவனை இழந்து வாடும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற எண்ணற்ற கொடுமைகள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருகிறது.
இதையும் படியுங்கள்: செலவுக்கு பணம் வாங்கச் சென்ற இளம் நடிகை.. அறையில் பூட்டி வைத்து கதற கதற வன்புணர்வு.
இந்த வரிசையில் வறுமையின் காரணமாக கடன் கேட்க வந்த பெண்ணை அறைக்குள் பூட்டி வைத்து உல்லாசம் அனுபவித்து உள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.முழு விவரம் பின்வருமாறு:- தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் இந்திரா நகரை சேர்ந்தவர் (22) வயது இளம்பெண், இவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: மாணவிகளுக்கு லவ் லெட்டர் கொடுங்கடா.. வகுப்பறையில் பாலியல் பாடம் எடுத்த சில்மிஷ வாத்தியார்.
2 திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார், இன்னும் சில படங்களில் வாய்ப்பு தேடி வருகிறார், இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் அந்தப் பெண்ணுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. அப்போது தனக்கு தெரிந்த பாலு நாயக் என்ற நபருக்கு தொலைபேசியில் அழைத்து கடனாக பணம் கேட்டார், உடனே பாலு நாயக்கும் பணம் பெற்றுச் செல்ல வருமாறு அழைத்தார்.
அதை நம்பி பாலு நாயக் கூறிய இடத்திற்கு அந்த பெண் சென்றார். அப்போது அந்தப் பெண்ணை அறையில் தள்ளி கதவை பூட்டிய பாலு நாயக் அந்தப் பெண்ணை கதற கதற பாலியல் வன்புணர்வு செய்தார். அவரிடமிருந்து தப்பிக்க அந்தப் பெண் முயற்சித்தும் முடியவில்லை, அதன் பின்னர் தனது நண்பர்களுக்கும் ஒத்துழைத்தால் கூடுதலாக 5 ஆயிரம் தருவதாக பாலு நாயக் கூறினார்.
ஆனால் அங்கிருந்து தப்பித்து வந்த அந்தப் பெண் தனக்கு நடந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் கூறினார். பின்னர் அவர்கள் பாலு நாயக்கை நேரில் பார்க்க சென்றனர், ஆனால் அவர் அதற்குள் அந்த அறையை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். எனவே தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து இளம் நடிகை பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.