காமம் தலைக்கேறிய மனைவி ! கள்ளக்காதலனை ஏவி கணவைரை டிராக்டர் ஏற்றி கொன்ற கொடூரம் !!

By Selvanayagam PFirst Published Sep 26, 2019, 10:30 AM IST
Highlights

விவசாயின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலை கண்டித்ததால் மொபட்டில் சென்ற அவரை  டிராக்டரை ஏற்றி படுகொலை செய்த கல்லூரி மாணவனையும், விவசாயின் மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே முடிகனம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மனோகரன் . இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு கார்வேந்தன் என்ற 9 வயது மகன் உள்ளார். மனோகரன்  வீட்டுக்கு அருகே சுதாகர்  என்பவர் வசித்து வந்தார்.  இவர் சின்னதாராபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி யில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

பக்கத்து வீடு என்பதால் சித்ராவுக்கும், மனோகரனுக்கும் அடிக்கடி பார்த்து பேசிக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகி வந்த இவர்களுக்கு இடையேயான நட்பு  நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவருக்கும் இடையே 17 வயது வேறுபாடு இருந்தாலும் இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.


இந்நிலையில் மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் மனோகரனுக்கு தெரியவந்தது. இதனால் அவர், சித்ராவை கண்டித்தார். மேலும் சுதாகருடன் தொடர்பை துண்டித்துவிடுமாறு  அறிவுறுத்தினார். 

ஆனால் சித்ராவால் கள்ளக்காதலனை மறக்க முடியவில்லை. கணவரின் எச்சரிக்கையை மீறியும் சித்ரா தனது கள்ளக்காதலனுடன் தொடர்பை நீடித்து வந்தார். இதற்கு கணவர் தடையாக இருப்பதால் அவரை தீர்த்துக் கட்ட மனைவி சித்ராவும், அவரது கள்ளக்காதலன் சுதாகரும் முடிவு செய்தனர். இதைதொடர்ந்து மனோ கரனை கொலை செய்ய 2 பேரும் கடந்த 6 மாதமாக திட்டம் போட்டனர்.

இந்த நிலையில் க.பரமத்தி சந்தையில் பொருட்களை வாங்க மனோகரனை நேற்று முன்தினம் சித்ரா அனுப்பி வைத்தார். மேலும் இந்த தகவலை தனது கள்ளக்காதலனிடம் சித்ரா செல் போனில் தெரிவித்து, அவர் வரும் போது கொலை செய்து விடும் படி கூறினார்.

இதைதொடர்ந்து சுதாகர் தனது வீட்டில் இருந்து டிராக்டரை எடுத்துக் கொண்டு க.பரமத்தி சந்தை நோக்கி புறப்பட்டார். அப்போது சந்தையில் இருந்து மனோகரன் மொபட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். முடிகனம் கருப்புசாமி காடு அருகே வந்தபோது டிராக் டரை மொபட் மீது சுதாகர் மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மனோகரன் மீது டிராக்டரை ஏற்றிவிட்டு வீட்டிற்கு திரும்பினார். 

இதற்கிடையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மனோகரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக கரூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென் றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், மனோகரனை அவரது மனைவி சித்ராவும், கள்ளக்காதலன் சுதாகரும் திட்டம் போட்டு கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

click me!