பெத்த பொண்ணையே, அட *த்தூ.. அப்பாவும், சித்தப்பாவும் சேர்ந்து 7 வயது மகளை கற்பழித்த சம்பவம்

By Raghupati RFirst Published Jul 22, 2022, 8:48 PM IST
Highlights

7 வயது சிறுமியை அப்பாவும் சித்தப்பாவும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொல்கத்தாவில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள டயமண்ட் ஹார்பரில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ‘தனது கணவரும் அவரது தம்பியும் எனது மகளை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துவருகின்றனர். இதனை நான் கண்டிக்கவே என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர். ஒருகட்டத்தில் என்னால் பொறுக்க முடியவில்லை. 

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பெண்னின் தாயார் புகாரளிக்க இந்த விஷயம் வெளியே வந்துள்ளது. ‘அவளுக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது அவர்கள் இதைச் செய்கிறார்கள். நான் அவர்களைத் தடுக்கச் சென்றபோதெல்லாம் அவர்கள் என்னை உடல் ரீதியாகத் தாக்கினர். என் எதிரில் சிறுமியுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டனர். என் மாமியார் கூட எனக்கு ஆதரவாக இருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு புகார் அளிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 

மேலும் செய்திகளுக்கு..அதிமுகவுக்கு ஓபிஎஸ் வரலாம்.. இது அண்ணன் - தம்பி சண்டை தாங்க - செல்லூர் ராஜு கொடுத்த சிக்னல்!

அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்று சிறுமியின் தாயார் போலீசில் முறைப்படி புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அவரது தந்தை மற்றும் அவரது மாமாவால் தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பதை காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. ஆபாச படங்களை பார்க்கும்படி சிறுமியை வற்புறுத்தியுள்ளனர். 

சிறுமியின் தாயின் புகாரின் அடிப்படையில் நாங்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று டைமண்ட் ஹார்பர் காவல் நிலையத்தின் மூத்த விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒன்றரை வயதிலிருந்தே தனது தந்தையும் மாமாவும் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கொடுமைக்கு சிறுமியின் தாய் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தார். 

மேலும் செய்திகளுக்கு..ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு சசிகலா ஆதரவு - அதிர்ச்சியில் எடப்பாடி.. மகிழ்ச்சியில் ஓபிஎஸ் !

குற்றம் நிகழாமல் தடுக்க பல முயற்சிகள் செய்த போதிலும், நாளுக்கு நாள் தன் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை அவளால் தாங்க முடியவில்லை. இறுதியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், குழந்தையின் தந்தை மற்றும் மாமா மீது மகளிர் சங்கத்தின் மேற்பார்வையில் துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிந்தது. 

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக டயமண்ட் ஹார்பர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

click me!