ஜோதிகா எவ்வளவோ கெஞ்சியும் மறுத்து விட்ட சூர்யா..! இவங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனையா...?

First Published Apr 22, 2018, 6:45 PM IST
Highlights
surya refused to accept the jothika speech


கோலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வளம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா. எப்போதும் இளம் காதலர்கள் போலவே இருக்கும் இவர்கள் தான் பல நட்சத்திர காதலர்களுக்கு ரோல் மாடல் என்று கூட கூறலாம்.

சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகா ஆசை பட்டால் உடனடியாக அந்த விஷயத்தை செய்து முடிப்பவர். இவர் தற்போது ஜோதிகா பலமுறை கேட்டும் ஒரு விஷாயத்துக்கு மட்டும் விடாப்புடியாக நோ சொல்லிவிட்டாராம். 

ஜோதிகா தற்போது பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கும் புதிய படத்தில் கமிட்டானார். இது ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான 'துமாரி சுலு' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட உள்ளது என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்த படத்தின் தலைப்பை அண்மையில் தான் படக்குழுவினர் வெளியிட்டனர். "காற்றின் மொழி" என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு முதலில் 'ஜோ' என்கிற தலைப்பை தான் வைப்பதாக படக்குழுவினர் முடிவு செய்தார்களாம். இது ஜோதிகாவிகற்கும் மிகவும் பிடித்து விட்டதால் இதே பெயரையே படத்திற்கு வைத்து விடலாம் என எண்ணி சூர்யாவிடம் இது குறித்து கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு சூர்யா துளியும் சம்மதிக்க வில்லையாம். பல முறை ஜோதிகா இது குறித்து சூர்யாவிடம் பேசியும், கெஞ்சியும் வேலைக்கு ஆகாததால், பிரச்னையை பெரிது படுத்தாமல் படத்திற்கு 'காற்றின் மொழி' என்று பெயர் வைத்தார்களாம்.  

click me!