பெத்தவங்க தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக் கொள்ள ஊக்கப்படுத்தணும்… அதிரடி ஐடியா கொடுத்த நடிகை !!

By Selvanayagam PFirst Published Sep 30, 2019, 7:57 PM IST
Highlights

பாலியல் உறவை ஒதுக்கப்பட்ட விஷயமாகப் பார்க்காமல் பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக உறவு கொள்ளுமாறு ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகை கங்கனா ரணவத்  வலியுறுத்தியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் டாப் லெவல்  நடிகையாக வலம் வருபவர்  கங்கனா ரணவத். மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கத்தில் ஜெயம ரவிக்கு ஜோடியாக தாம் தூம் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் 'தலைவி' படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய  நடிகை கங்கணா ரணவத், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பாலியல் உறவு முக்கியமானதாகத் திகழ்கிறது. பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பினால் அந்த சிந்தனையிலிருந்து விலகியிருக்காமல் வைத்துக்கொள்ள வேண்டும் என அதிரடியாக தெரிவித்தார்..

முன்னொரு காலத்தில் ஒருவரை திருமணம் செய்துகொண்டு, உணர்ச்சிகள் முழுவதையும் அவரிடமே கொட்ட வேண்டும் என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. வரலாற்றில் பல்வேறு படையெடுப்புகளை சந்தித்துள்ளதால் இதுபோன்ற சிந்தனைகள் நம் மக்களிடையே தற்போது உள்ளது. மேலும், நமது வேதங்கள் இதனை அனுமதிப்பதில்லை.

ஆனால் பெற்றோர் தங்களது பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும். அதே சமயம் பாதுகாப்பாக உறவு மேற்கொள்வது குறித்து ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கூறி அதிர வைத்தார்.

நான் பாலியல் உறவில் ஆக்ட்டிவாக இருப்பதை தெரிந்துகொண்ட எனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர் என்றும் கங்கனா ரணவத் குண்டைத் தூக்கிப் போட்டார்.

சினிமாவில் கவர்ச்சிகரமாகவும் போல்டான கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் கங்கனா, பல்வேறு சர்ச்சை கருத்துகளையும் தெரிவித்து சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார். தற்போது பாலியல் உறவு குறித்து இவரது இந்தக் கருத்து அவரது பொற்றோருக்கு ஏற்பட்டதுபோல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

click me!