
கடந்த சில மாதங்களாகவே நயன்தாரா ஒரு புதிய ஸ்கின் கேர் பிராண்ட் நிறுவனத்தை துவங்க ஆயத்தமாகி வந்தார். இதனையடுத்து அது குறித்த சில தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தற்போது வெளியிட்டுள்ளார். தனது ஸ்கின் கேர் நிறுவனத்தின் முதல் தயாரிப்பை அவர் நாளை வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கோலாலம்பூரில் தங்களின் ஸ்கின் கேர் பிராண்டான 9 ஸ்கின் அறிமுகம் செய்ய உள்ளனர். அவர்கள் சிங்கப்பூர் தொழிலதிபரான டெய்சி மோர்கனுடன் இணைந்து தற்போது இந்த வணிக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வெளியான சில தகவல்களின்படி இந்த நிகழ்வு வரும் செப்டம்பர் 29 அன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மீண்டும் நெல்சனுடன் கைகோர்க்கும் அனிரூத்..? புது மாப்பிள்ளை தான் ஹீரோவாம் - வெளியான சுவாரசிய தகவல்!
இந்த மாத தொடக்கத்தில், நயன்தாரா தனது ஸ்கின் கேர் பிராண்டான 9 ஸ்கின் டீசரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதே போல அடுத்த பதிவில், "இன்று, எங்கள் ஆறு வருட அயராத முயற்சி மற்றும் அன்பை வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை மற்றும் நவீன அறிவியலால் ஆதரிக்கப்படும் பார்முலாக்கள் மற்றும் உங்கள் சுய-கவனிப்பு வழக்கத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட, தயாரிப்பை அறிமுகம் செய்யவுள்ளோம் என்றார்.
இந்நிலையில் விரைவில் இந்த நிறுவனம் தங்கள் பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ள நிலையில், நாளை தங்கள் ஸ்கின் கேர் தயாரிப்பு குறித்த தகவல்கள் வெளியாகும் என்று நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கதிர் - ஞானத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி..! வசமாக சிக்கும் நந்தினி.. சுயரூபத்தை காட்டிய விசாலாட்சி!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.