
விபத்தில் சிக்கியோ அல்லது மூளைச்சாவு அடைந்த நிலையில் இருப்பவர்கள், உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தால் அவர்களின் இறுதிச் சடங்குகளை இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ள உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பால் உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது அதுமட்டுமின்றி பொதுமக்களிடம் உறுப்பு தானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
முதல்வரின் இந்த மகத்தான அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தற்போது முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம். இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... இதைவிட சிறப்பான மரியாதையை யாராலும் அளிக்க முடியாது; ஸ்டாலினுக்கு அன்புமணி பாராட்டு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.