சர்ச்சையை கிளப்பிய சாரு ஹாசன்... ப்ரீ பப்ளிசிட்டிக்காக பெரிய பிரச்சனையில் சிக்கப்போகும் சம்பவம்....!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 03, 2020, 04:08 PM IST
சர்ச்சையை கிளப்பிய சாரு ஹாசன்... ப்ரீ பப்ளிசிட்டிக்காக பெரிய பிரச்சனையில் சிக்கப்போகும் சம்பவம்....!

சுருக்கம்

உள்ளூரில் சாதாரண தாதாவாக இருக்கும் ஒருவர் தன் புத்தியின் பலத்தை கொண்டு உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை இடத்தை அடைகிறார் என்ற பின்னணியில் படம் உருவாக்கப்படுகிறதாம். 

சாரு ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களை பெற்ற திரைப்படம் தாதா 87.  இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவது குறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தில் லோக்கல் தாதாவாக கலக்கிய சாரு ஹாசன், இந்த படத்திலும் தாதாவாக தான் களம் இறங்க உள்ளார். 

 

இதையும் படிங்க: “அது கல்யாணமே இல்ல”... உண்மையை ஓபனாக போட்டுடைத்த வனிதா வக்கீல்...!

முதல் பாகத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ, சாரு ஹாசனை வைத்து தாதா 87 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். கொரோனா லாக்டவுனுக்கு முன்பே இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. 7 நாட்கள் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியாகியுள்ள புகைப்படங்கள் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்ப போகிறது என இப்போதே கோலிவுட்டில் கிசு, கிசுக்க ஆரம்பித்துவிட்டனர். 

 

இதையும் படிங்க:  கண்டவன் எல்லாம் கலாய்க்கும் நிலைக்கு கணவரால் தள்ளப்பட்ட சமந்தா... வைரலாகும் இதை பார்த்தால் புரிஞ்சுக்குவீங்க!

சிவசேனா கட்சியின் நிறுவனரான மறைந்த பால் தாக்கரே தோற்றத்தில் வெளியாகியுள்ளது. படத்தில் இந்து மதத்தையோ, இந்துக்களையோ கொஞ்சம் கொச்சைப்படுத்திவிட்டால் கூட சிவசேனா கட்சியினர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு முதலில் எழும் குரல் அவர்களுடையதாகவே இருக்கும். இந்நிலையில் அக்கட்சியின் நிறுவனரான பால் தாக்கரே தோற்றத்தை ஒத்த படி வெளியாகியுள்ள சாரு ஹாசனின் புகைப்படங்கள் கண்டிப்பாக சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இதையும் படிங்க: வனிதா - பீட்டர் பால் அடுத்த முத்த லீலை... செய்யுறதை எல்லாம் செஞ்சிட்டு விளக்கம் வேற....!

உள்ளூரில் சாதாரண தாதாவாக இருக்கும் ஒருவர் தன் புத்தியின் பலத்தை கொண்டு உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை இடத்தை அடைகிறார் என்ற பின்னணியில் படம் உருவாக்கப்படுகிறதாம். கொரோனா நேரத்தில் ப்ரீ பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக படக்குழு வெளியிட்டுள்ள புகைப்படங்கள், படத்தையே மிகப்பெரிய சிக்கலில் மாட்டிவிடாமல் இருந்தால் சரி. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!