சூர்யா - ஜோதிகா கொளுத்தி போட்ட இந்த பிரச்சனை இன்னும் கோலிவுட்டில் தீர்ந்ததாக தெரியவில்லை. சூர்யா - ஜோதிகா கொளுத்தி போட்ட இந்த பிரச்சனை இன்னும் கோலிவுட்டில் தீர்ந்ததாக தெரியவில்லை.
கொரோனா பிரச்சனை காரணமாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக வேண்டிய படங்களே இன்னும் வெளியிடப்படாமல் உள்ளதால், இந்த பிரச்சனை அனைத்தும் முடிந்த பின், ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்களை, திரையரங்குகளில் வெளியிடுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியாத சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்தனர். இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இடையே பிரச்சனை வெடித்தது.
இதையும் படிங்க: ஒட்டு துணி கூட இல்லாமல் உச்ச கட்ட ஆபாசம்... பலான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாத சர்ச்சை இயக்குநரின் படம்...!
அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரிட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்' . இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. எப்போதும் போல் இந்த படமும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஜோதிகாவை தவிர, இயக்குனர் பாரதி ராஜா, பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: சரிந்து விழும் தாவணியை சரி செய்யாத பைங்கிளி...சகல அழகையும் ஒருசேர காட்டி அதிர்ச்சி கொடுத்த சாக்ஷி...!
கொரோனா பிரச்சனையால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா ஓடிடி பிளாட் ஃபாமில், இந்த படத்தை வெளியிட வெளியிட முடிவு செய்தார். சூர்யாவின் இந்த முடிவிற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் நிறுவனம் 9 கோடி ரூபாய்க்கு சூர்யா விற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
SHE. IS. FEARLESS. 👏👏👏 trailer out on May 21! pic.twitter.com/DGHaMM9PTd
— amazon prime video IN (@PrimeVideoIN)இதையும் படிங்க: முன்னாள் காதலியுடன் முழு நிர்வாணமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட வில்லன் நடிகர்... எதற்காக தெரியுமா?
சூர்யா - ஜோதிகா கொளுத்தி போட்ட இந்த பிரச்சனை இன்னும் கோலிவுட்டில் தீர்ந்ததாக தெரியவில்லை. பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து பல படங்கள் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் ஆக திட்டமிடப்படுவதால் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் கொரோனா பிரச்சனை உச்சத்தில் உள்ள இந்த சமயத்தில் சூர்யா - ஜோதிகா தம்பதி சரியான முடிவெடுத்ததாக ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பொன்மகன் வந்தாள் திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 21ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.