துணை நடிகை பாலியல் புகாரில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்... முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!

By manimegalai aFirst Published Jun 2, 2021, 3:36 PM IST
Highlights

நடிகையின் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள்  அதிமுக அமைச்சர் மணிகண்டன் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
 

நடிகையின் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள்  அதிமுக அமைச்சர் மணிகண்டன் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி (36). மலேசிய குடியுரிமை பெற்ற இவர், மலேசிய சுற்றுலா வளர்ச்சி கழக தூதரகத்தில் வேலை செய்து வந்தார். 2017ம் ஆண்டு அதிமுக அமைச்சரவையில் தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் அவரது நண்பர் பரணி என்பவர் மூலம் நடிகைக்கு நட்பு கிடைத்துள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். முதலில் அமைச்சரின் ஆசைவார்த்தையை ஏற்க மறுத்த நடிகை பிறகு திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன் பிறகு பெசன்ட் நகர் மதுரிதா அப்பார்ட்மென்டில் மணிகண்டன் மற்றும் நடிகை சாந்தினி ஆகியோர் கணவன், மனைவி போல் வசித்து வந்துள்ளனர். மேலும், மணிகண்டன் சென்னையில் இருக்கும் போது நடிகை வீட்டில்தான் தங்குவார். இதனால் நடிகை 3 முறை கருவுற்றுள்ளார். ஒவ்வொரு முறையும் மணிகண்டன் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மணிகண்டன் பலமுறை நடிகை சாந்தினியை அடித்து உதைத்துள்ளார். இது தொடர்பாக சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், அந்தரங்க புகைப்படங்களை எடுத்து மிரட்டல் விடுத்ததாகவும், பாலியல் வன்முறை செய்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: கழண்டு விழும் மேலாடை... எக்கு தப்பா கவர்ச்சி காட்டி அதகளம் செய்யும் 'சித்தி 2 ' சீரியல் நடிகை வெண்பா!
 

இதையடுத்து இந்த வழக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகாரை விசாரித்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். குறிப்பாக கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம் , பாலியல் வன்முறை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது கைது நடவடிக்கை பயந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருந்து வருகிறார்.

மேலும் செய்திகள்: கோலிவுட் திரையுலகை அச்சுறுத்தும் அடுத்தடுத்த மரணங்கள்... பிரபல தயாரிப்பாளர் உடல்நல குறைவால் காலமானார்!
 

இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்த மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிற காரணத்தினால், அவர் மீது போடப்பட்டிருக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான தகுந்த ஆதாரங்களை தீவிரமாக காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் நடிகை சாந்தினி மலேசியாவில் இருந்தபோது கோபாலபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவர் அருணுக்கு தொலைபேசியில் அழைத்து அவருடன் உரையாடும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடியோ பதிவின் மூலம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் மருத்துவர் அருணும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருவது தெளிவாகிறது.

மேலும் அதில் மருத்துவர் அருணே, மூன்று முறை ஷாந்தினிக்கு கருக்கலைப்பு செய்ததை ஒப்புக்கொள்வது போன்ற பேச்சுகளும், தன்னை ஆபாச வார்த்தைகளால் கொச்சையாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசி வருவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக அப்போதைய முதல்வரை சந்தித்து நேரடியாக புகார் அளிக்கவுள்ளதாகவும் நடிகை சாந்தினி மருத்துவர் அருணிடம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு அறிவுரை வழங்குமாறு மருத்துவர் அருணிடம் கேட்க அதற்கு நான் கூறுவதை அவர் கேட்கமாட்டார் என்ற பதிலை மருத்துவர் அருண் கூறுவதும்  அதில் பதிவாகி இருந்தது.

மேலும் செய்திகள்: கத்தரி பூவழகி... கரையா பொட்டழகி... பாடவடை தாவணியில் கிராமத்து கிளியாக மாறிய பாண்டியன் ஸ்டோர் முல்லை!
 

இந்நிலையில், போலீசார் சாந்தினி கொடுத்த புகாரின் அடிப்படையில்... முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தீவிரமாக தேடி வரும் நிலையில், அவருடைய செல்போன், மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவருடைய போன் கால்களையும் ட்ரேஸ் செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திடீர் என முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சென்னை உயர் நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனுவில் அவர்,  திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறும் புகார்தாரர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை அளிக்கப்பட்டுள்ளதாகவும், பிரபலமானவர்களை டார்கெட் செய்து நடிகை தொடர்ந்து பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், மலேஷியாவில் பலரை அவர் பணம் கேட்டு மிரட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதே போல் நடிகையை கருக்கலைப்பு செய்யும்படி மிரட்டவில்லை என்றும், அவராகவே கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். சினிமா வாய்ப்பு இல்லாததாலும், பெற்றோரின் மருத்துவ சிகிச்சைக்காகவும் உதவி கேட்டதால் பரணி என்பவர் மூலம் 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அதை பரணி திருப்பி கேட்டது முதல் தன்னை பிளாக்மெயில் செய்ய துவங்கியதாகவும் முன்னாள் அமைச்சர்  மணிகண்டன் தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகை சாந்தினியை மிரட்டவில்லை என்றும், ஆரம்பகட்ட விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல், தனக்கு எதிராக அவசர அவசரமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!