
பார்ப்பதற்கு நடிகர் செந்தில் போலவே, உருவ அமைப்புடன் வலம் வரும் ஜெயமணி, சுமார் 75க்கும் மேற்பட்ட படங்களில், காமெடி வேடத்தில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களின் படங்களில் வடிவேலு மற்றும் விவேக்குடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் நடைபயிற்சி மேற்கொண்ட நீதிபதியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், பிரச்சனை முற்றியதால்... இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கிண்டி காவல் துறையினரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது, "நீதிபதி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரை வம்பிழுத்ததாகவும், வாய் வார்த்தை முற்றியதால் நீதிபதி என்றும் பாராமல் அவரை இழுத்து தாக்க முயன்றதாக புகார் கொடுக்கப்பட்டது".
இந்த புகாரின் அடிப்படையில் கிண்டி காவல்துறையினர் நடிகர் ஜெயமணி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் ஜெயமணியின் நெருங்கிய நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.