பிக்பாஸ் நடிகை மீது கொலை முயற்சி வழக்கு...இன்று கைதாகிறார்?...

By Muthurama LingamFirst Published Aug 27, 2019, 11:00 AM IST
Highlights

பிக்பாஸ் பிரபலமும் முன்னாள் மிஸ் இந்தியா பட்டம் வாங்கிப் பின்னர் அதைப் பறிகொடுத்தவருமான நடிகை மீரா மிதுன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர் மிக விரைவில் கைதாகக்கூடும் என்று தெரிகிறது.

பிக்பாஸ் பிரபலமும் முன்னாள் மிஸ் இந்தியா பட்டம் வாங்கிப் பின்னர் அதைப் பறிகொடுத்தவருமான நடிகை மீரா மிதுன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர் மிக விரைவில் கைதாகக்கூடும் என்று தெரிகிறது.

சூர்யாவின் ’தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் நடித்தவர் மீரா மிதுன்.  அதை அடுத்து மேலும் ஒன்றிரண்டு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தார். இவர் 2019-ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர். விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலராலும் மீரா மிதுன் அறியப்பட்டார். அப்போட்டியில் கலந்துகொண்டிருந்தபோது அவரது தொழில் போட்டியாளர்கள் அவர் மீது போலீஸில் புகார் கொடுத்தவண்ணம் இருந்தனர்.

அதை அடுத்து மீரா மிதுன் தனது போட்டியாளர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாகவும் தேவைப்பட்டால் கொலை செய்துவிடலாம் என்பதுபோல் ஒரு ஆடியோ யூடியுப் வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ஆனால் அது மீரா மிதுனின் குரல்தானா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், எனக்கும், மீரா மிதுனுக்கும் இடையே பணப்பிரச்னை உள்ளது. இந்நிலையில் தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்த மீரா மிதுன் திட்டமிட்டுள்ளார். இதனால் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். 2017ம் ஆண்டு பேஸ்புக் மூலம் நண்பர்களான மீரா மிதுனுக்கும், பிரவினுக்கும் இடையே பணப்பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.புகாரை ஏற்றுக்கொண்ட எழும்பூர் போலீசார், மீரா மிதுன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

click me!