Asianet News TamilAsianet News Tamil

செயற்கை கருத்தரிப்பு முறையைப் பயன்படுத்தி செம்மறி ஆட்டுகளின் உற்பத்தியைப் பெருக்கலாம்…

using in-vitro-fertilization-method-of-increasing-the-p
Author
First Published Jan 11, 2017, 1:22 PM IST


செயற்கைக் கருத்தரிப்பு முறை செம்மறியாடுகளில் தற்போது தான் பின்பற்றப்படுகிறது. இம்முறை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

நல்ல தரமான பொலிக் கிடாவின் விந்தணுவிலிருந்து வீரியம் குறைந்த பெட்டை ஆடுகளைக்கூட இம்முறையில் கருத்தரிக்கச் செய்யலாம். பெட்டை ஆடுகளை அதன் தோற்றம் மற்றும் உற்பத்தி அடிப்படையில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் இச்செயற்கைக் கருவூட்டல் முறை 1950-க்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுத் தற்போது தான் ஆங்காங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனினும் செம்மறியாடுகளின் விந்தணுக்கள் அதிகம் சேமித்து வைக்கப்படுவதில்லை. இந்த விந்தணுக்கள் நிறம், அடர்த்தி, அளவு போன்ற தோற்றத்தின் அடிப்படையிலே பிரிக்கப்படுகின்றன. இதில் ஆராய்ச்சிகள் அதிகம் நடத்தப்படவில்லை.

மூன்று முறைகளில் செம்மறி ஆடுகளில் விந்தணு சேகரிக்கலாம்

  1. சினைப்பை மூலம்
  2. செயற்கை சினைப்பை முறை
  3. மின்சார தூண்டல் முறை

மின்சாரத் தூண்டல் முறையில் செம்மறி ஆட்டுக் கிடாக்களை 1 நாளைக்கு 30 முறை தூண்டலாம். குறைந்தது 16 முறை வரை விந்துச் சேகரிக்கலாம். செம்மறி ஆடுகளில் தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்துக்கள் விந்தணு உற்பத்தியை அதிகம் பாதிப்பதில்லை.

1 மி.லி அடர்வு நீக்கப்பட்ட கரைசலில் 1 மில்லியன் விந்தணுக்களுக்குக் குறைவாக இருந்தால் அது வீரியம் மிக்கதாக இருக்காது.  சேகரித்த விந்தணுக்களை பெட்டை ஆட்டின் சினைப்பையில் வைக்கும் போது மிகக் கவனமாக வைத்தல் வேண்டும். இதில் முக்கியமான விஷயம் விந்தணுவானது கருப்பையின் வாய்ப்பகுதியில் வைக்கப்படவேண்டும். இதற்கு உறுப்புக்களை விரிவுப்படுத்திக் காட்டும் உபகரணம் கொண்டு கருப்பையின் வாய்ப்பகுதியில் சரியாக வைத்தல் வேண்டும்.

இம்முறை கால்நடைகளின் உட்பகுதியில் சரியாக வைத்தல் வேண்டும். இம்முறை கால்நடைகளைப் போல ஆடுகளில் அவ்வளவாகப் பின்பற்றப்படாவிடினும் சரியான முறைகளைக் கையாண்டால் ஆடுகளின் உற்பத்தி பெருகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios