Method of controlling the dampness that appears in vegetable crops ...
1.. தக்காளி, கத்தரி, மிளகாய், பாகற்காய், மற்றும் பூசணி போன்ற காய்கறிப் பயிர்களில் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் நோய் தோன்றும்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை கலந்து பின்னர் விதைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
2.. ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் போன்ற நோய்கள் எதுவும் பயிர்களைத் தாக்காது.
