தற்போது விவசாயிகள் பயிர் உற்பத்தியில் நிரந்தரமற்ற வருவாயை மேம்படுத்தவும் மற்றும் கூலியாட்கள் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கும் பெறும் பணியாற்றி வருகின்றது. இதனை மையமாக்க கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஒருங்கிணைந்த பண்ணை முறை.
Add Asianetnews Tamil as a Preferred Source

பயிர் தொகுப்பு, கால்நடை பராமரிப்பு , மீன் வளர்ப்பு, வனவியல் போன்ற வேளாண் சார் தொழில்கள், வேளாண் பொருளியலில் பெரும் ஆற்றல் வகுக்கிறது. இவை விவசாயிகளின் வருவாயை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பினையும் உயர்த்தியுள்ளது.
இது வேளாண் நுட்பத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உற்பத்தியை அதிகரித்துள்ளது.
இந்த முறையின் மூலம் பண்ணை கழிவுகளானது மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
பால் பண்ணை, கோழிப் பண்ணை, மீன் பண்ணை, பட்டு வளர்ப்பு போன்ற வேளாண் தொழில்களின் கலப்பு மூலம் வேளாண்மை செழிப்படைகிறது.
