Asianet News TamilAsianet News Tamil

வாழையை முறையாக பராமரித்தாலே கூடுதல் லாபம் பெறலாம்: எப்படி பராமரிக்கலாம்?

In addition to the banana paramarittale can profit how to maintain
in addition-to-the-banana-paramarittale-can-profit-how
Author
First Published Mar 31, 2017, 1:02 PM IST


வாழை பயிரிடும் விவசாயிகள், அவைகளை முறையாக பராமரிப்பதன் மூலம் கூடுதல் லாபம் பெற முடியும்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் வாழையை பரியிடுகின்றனர். வாழை இலை, வாழைத் தண்டு, வாழைக்காய் அல்லது வாழைப்பழம் ஆகியவற்றின் மூலம் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது.

ஆனால், இந்த வாழைகளை முறையாக பராமரித்தால் இன்னும் அதிக லாபம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

வாழையை எப்படியெல்லாம் பராமரிக்கலாம்?

1.. வாழை பயிரிடும் விவசாயிகள் வாழையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மண்வெட்டியால் கொத்தி மண் அணைக்க வேண்டும்.

2.. பக்கக் கன்றுகளை மாதம் ஒரு முறை நீக்க வேண்டும்.

3.. இலைக்காக சாகுபடி செய்யப்படும் பூவன், கற்பூரவள்ளி மற்றும் மொந்தன் ரகங்களில் முதல் மூன்று அல்லது நான்கு பக்கக் கன்றுகளை வளர விடலாம்.

4.. பக்க கன்றுகள் மீண்டும் மீண்டும் துளிர்த்தால் பக்கக் கன்றுகளின் நடுக்குருத்தில் ஒரு கன்றுக்கு இரு சொட்டுகள் மண்ணெண்ணெய், இங்க் ஃபில்லர் கொண்டு விட்டு அழிக்கலாம். அதிக சொட்டுகள் மண்ணெண்ணெய் விட்டால் தாய்க்கன்றுகள் இறந்துவிடும். எனவே மண்ணெண்ணெய் விடும்போது கவனமாக இருக்கவும்.

5.. கடைசி பூ அல்லது சீப்பு வெளிவந்த ஒரு வாரத்தில் பூவை ஒடித்துவிட வேண்டும். பிறகு, 10 கிராம் யூரியா ஒடிக்கப்பட்ட பகுதியில் தொட்டுக் கொண்டிருக்கும்படி கட்டி விடலாம். இதனால் சத்துகள் அனைத்தும் காய்களுக்கு செல்வதால் வாழைக்காய்கள் விரைவில் முதிர்ச்சி அடையும்.

6.. வாழைக் காய்களின் பருமனை அதிகரிக்க ஒரு கிராம் டு 4 டி மருந்தை 20 மி.லி. எரிசாராயத்தில் கரைத்து பின் அத்துடன் 40 லிட்டர் தண்ணீர் கலந்து பூவின் கடைசி மடல் விரிந்ததும் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

7.. வாழையில் நீண்ட சதைப் பற்றுள்ள காய் மற்றும் காய்ப்பிடிப்பு தன்மையை அதிகரிக்க, பயிர் வளர்ச்சி ஊக்கி சைட்டோசைம் 180 மிலியை 180 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் வாழை மரங்களில் நடவு செய்த 90 மற்றும் 120வது நாட்களில் விசைத்தெளிப்பான் கொண்டு அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மட்டும் தெளிக்க வேண்டும்.

8.. வறட்சியான சமயங்களில், ஒரு வாழை மரத்துக்கு டை பொட்டாசியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராம் என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து விசைத்தெளிப்பான் கொண்டு இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.

9.. வாழைத் தார் நன்கு பெருக்க ஒரு மரத்துக்கு யூரியா 350 கிராம் மற்றும் மியூரேட் ஆப் பொட்டாஷ் 250 கிராம் வேர்ப்பகுதியில் மண்ணில் இட்டும் நீர்ப் பாய்ச்சலாம்.

10.. காற்றடிக்கும் நேரங்களில், மரங்கள் சாய்ந்து விடாமல் இருக்க திடமான கம்பு கொண்டு எதிர்புறமாக முட்டுக் கொடுக்க வேண்டும். காய்ந்த இலை மற்றும் நோய் தாக்கிய இலைகளை அவ்வப்போது அகற்றி எரிப்பதால் வாழை வயலை நோய், பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

11.. காய்களின் நுனியில் ஒட்டியிருக்கும் பூவின் எஞ்சிய பாகத்தை நீக்குவதால் நோய் பரவுவதை தடுக்க முடியும்.

இப்படி பராமரித்து வாழைகளை வளர்த்தல் நல்ல வளர்ச்சியும் அதனால் நல்ல வருமானும் கிடைக்கும்.

எப்படி கூடுதல் வருமானம் பெறுவது?

1.. கூடுதல் வருமானம் கிடைக்கவும், களைகளைக் கட்டுப்படுத்தவும் வாழையில் ஊடுபயிராக மணிலா, உளுந்து, தட்டைப்பயிர், மொச்சை, சோயா மொச்சை, மிளகாய், கிழங்கு வகைகள், பூ வகைகள், இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களை பயிர் செய்யலாம்.

2.. கொடிவகைக் காய்கனிகளான பூசணி, தர்பூசணி, பரங்கி, வெள்ளரி, பாகல், சுரை மற்றும் புடலை போன்றவற்றை வாழையில் ஊடுபயிர்களாக பயிரிடக்கூடாது. ஏனெனில், இக் கொடிவகைக் காய்கறிகளில் ஏற்படும் ஒரு வகை வைரஸ் நச்சுயிரி நோய் வாழைக்கு பரவும் அபாயம் உள்ளது.

3.. பப்பாளி, தக்காளி, பலா, சம்பங்கி, சாமந்தி, ரப்பர், பாக்கு, காப்பி, தேயிலை, நெல், காய்கறி மற்றும் கோகோ பயிர்களை ஆப்பிரிக்க நத்தை தாக்கும். இவை வாழையையும் தாக்கும் அபாயம் இருப்பதால் இப் பயிர்களை எக்காரணம் கொண்டும் வாழையில் ஊடுபயிராக பயிரிடக்கூடாது.

Follow Us:
Download App:
  • android
  • ios