கிராமப் புறங்களில் உள்ள முப்பது வயதுக்குக் குறைவான வயதுடைய இளைஞர்களில் பெரும்பாலோருக்கு ஏர் பிடிக்கத் தெரியாது என்பதும் விதை விதைக்கத் தெரியாது என்பதும் கசப்பான உண்மையாகும்!
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
ஏர் பிடிக்கத் தெரியாமல் போனதற்கு காரணம் கால் நடைகளின் பயன்பாடு குறைந்துபோனதும் அவற்றிடம் வேலை பழக்கவும் வேலை வாங்கவும் ஆட்கள் இல்லை என்பதும் ஆகும்.
விதை விதைக்கத் தெரியாமல்போனதற்குக் காரணம் மானாவாரி விவசாயமும் விவசாயி விதை சேமித்து வைக்கும் பழக்கமும் ஒழிந்துபோனதே ஆகும்!
இதன் விளைவாக அளவுக்கு மிஞ்சிய இயந்திரங்கள், ரசாயன உரம், பூசிக் கொல்லிகள் ஆகியவற்றின் பயன்பாட்டால் நிலங்கள் களர்த் தன்மைக்கு மாறிவருகின்றன என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்!
இது எங்குபோய் முடியுமோ என்று நினைத்தால் அச்சமாக உள்ளது!
