Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் ஆபத்தில் சிக்கிய ஐரோப்பிய நாடுகள்..!! தலையில் அடித்துக் கதறும் WHO..!!

ஊரடங்கு தளர்த்துவதன் மூலம் மக்கள் கூட்டமாக திரளும் சூழல் ஏற்பட்டுள்ளதால் , ஐரோப்பாவில் உள்ள  நான்கில் மூன்று பங்கு நாடுகளில்  வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார் , 

world health organization warning Europe countries
Author
Delhi, First Published May 1, 2020, 1:53 PM IST

ஐரோப்பிய நாடுகள் மீண்டும் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது,  குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மிக வேகமாக ஊரடங்கை தளர்த்தி வரும் நிலையில் இந்த  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது  உலக அளவில் சுமார் 30 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .  உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது.   கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இருந்து சிகிச்சை பெற்றுக் மீண்டுள்ளனர்.   சீனாவிலிருந்து உலகம் முழுதும் பரவியுள்ள இந்த வைரஸால் மற்ற நாடுகளை விட ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில்  முதல் 5 இடங்களை பிடித்துள்ளன . 

world health organization warning Europe countries

இதுவரை ஸ்பெயினில் 2 லட்சத்து 39 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அங்கே 24 ஆயிரத்து 543 பேர் உயிரிழந்துள்ளனர் . அதேபோல் இத்தாலியில் 2 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,  சுமார் 28,000 பேர் உயிரிழந்துள்ளனர் , பிரான்சில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டதில் 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் .  அதேபோல் ஜெர்மனியில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சுமார் 6600 பேர் உயிரிழந்துள்ளனர் .  அமெரிக்காவில் கொரோனா தீவிரமாவதற்கு முன்பாகவே ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி ஐரோப்பிய நாடுகளில் காய்ச்சல்  உச்சக்கட்டத்தில் இருந்தது .  கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நோய்த்தாக்கம் உச்ச நிலையில் இருந்த நிலையில்  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதன் பாதிப்பை படிப்படியாகக் குறைந்தது .  இதனால் நோய்த்தாக்கம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு வந்தது என அறிவித்த அந்த  நாடுகள் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாக  அறிவித்தன. 

world health organization warning Europe countries

இந்நிலையில் ஜெர்மனி சில தினங்களுக்கு முன்னர் கட்டுப்பாட்டை தளர்த்திய நிலையில் அங்கு நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது .  இதனையடுத்து இங்கிலாந்து துருக்கி உள்ளிட்ட நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.  முன்னதாக ஸ்பெயின் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் தங்களது நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன , இதனால் மீண்டும் அந்நாடுகளில் புதிய நோய்த் தொற்றுகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது .  இந்நிலையில்  உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு தலைவர்  டாக்டர் ஹான்ஸ் குலூக் , ஐரோப்பிய நாடுகளை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார் .  ஐரோப்பிய நாடுகள் மிக வேகமாக தடைகளை தளர்த்தி வருவதன் மூலம் அங்கே புதிய தொற்றுகள்  உருவாகும் சூழல் அதிகரித்துள்ளது .  ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள 44 நாடுகளில் 21 நாடுகள் ஏற்கனவே கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன ,  இன்னும் 11 நாடுகள் அடுத்த சில தினங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளன, 

world health organization warning Europe countries

ஊரடங்கு தளர்த்துவதன் மூலம் மக்கள் கூட்டமாக திரளும் சூழல் ஏற்பட்டுள்ளதால் , ஐரோப்பாவில் உள்ள  நான்கில் மூன்று பங்கு நாடுகளில் வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார் ,   முன்னதாக தங்கள் நாட்டில் வைரஸ் மீண்டும் பரவுவதை அறிந்த ஜெர்மன் மீண்டும்  ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது .  ஊரடங்கை தளர்த்துவதில் சர்வதேச நாடுகள் அவசரம் காட்டக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில்  மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios