Asianet News TamilAsianet News Tamil

ஜப்பானில் அவசர பிரகடனம்..!! காட்டுத்தீயாக பரவும் கொரோனாவால் முடங்குகிறது 6 மாகாணங்கள்..!!

ஜப்பானில் கொரோனா வைரசின் தாக்கத் அதிகரித்து வரும் நிலையில்  அடுத்த ஒரு மாத காலத்திற்கு  ஆறு மாகாணங்களில் அவசர நிலையை பிரகடனம் செயவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

japan announce emergency for 6 prominent  regarding corona
Author
Delhi, First Published Apr 7, 2020, 3:22 PM IST

ஜப்பானில் கொரோனா வைரசின் தாக்கத் அதிகரித்து வரும் நிலையில்  அடுத்த ஒரு மாத காலத்திற்கு  ஆறு மாகாணங்களில் அவசர நிலையை பிரகடனம் செயவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் , நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் தவிர்க்க முடியாத காரணத்திற்காக இந்த அவசர நிலையை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார் .  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது உலகளவில் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உலக அளவில் 70 ஆயிரத்தை கடந்துள்ளது .  இந்நிலையில்  அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் ஈரான் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  

japan announce emergency for 6 prominent  regarding corona

அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமான வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . அமெரிக்காவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது , இந்நிலையில் மற்ற நாடுகளை காட்டிலும் குறைந்த அளவிலேயே ஜப்பானில் வைரஸ் தொற்று இருந்து வந்தது ,  இந்நிலையில்  திடீரென அந்த வைரஸ்  அங்கு வேகமெடுக்க தொடங்கியுள்ளது .  இதனால் இதை புரிந்து கொண்ட ஜப்பான் அரசு ஆறு மாகாணங்களில் அவசர பிரகடனம் செய்துள்ளது .  குறிப்பாக டோக்கியோ மற்றும் ஒசாக்கா போன்ற நகரங்களில் அவசரப் பிரகணனம் இன்று நள்ளிரவு முதல்  நடைமுறைக்கு வருகிறது.  அதிகம் பாதிக்கப்பட்ட 7 பிராந்தியங்களில் ஆளுநர்கள் மக்கள் வீடுகளில் அடங்கியிருப்பதை உறுதி செய்ய  வேண்டும் எனவும் ,  வணிகர்கள் முழு அடைப்பு  செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது .  இது குறித்து தெரிவித்துள்ள பிரதமர் ஷின்சோ அபே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பின்பற்றுகின்ற பாணியிலான  ஊரடங்காக இது  இருக்காது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் ஊரடங்கு பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளார் . 

japan announce emergency for 6 prominent  regarding corona

இந்த நடைமுறை அடுத்த ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .  அதேபோல் பொதுமக்களும்  ஊரடங்குக்கு ஓத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .   இதுவரை 4,000 க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு 80 பேர் உயிரிழந்துள்ளதால்  ஜப்பான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது . குறிப்பாக  பாதிக்கப்படும் 7 பகுதிகளுடன்  டோக்கியோவின் அண்டைபகுதிகளான  சிபா, கனகாவா மற்றும் சைட்டாமா, ஒசாகாவின் மேற்கு மையமாகவும், அண்டை நாடான ஹியோகோவிலும், தென்மேற்குப் பகுதியான ஃபுகுயோகாவிலும். இந்த நடவடிக்கை ஒரு மாதத்திற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios