Asianet News TamilAsianet News Tamil

2 குழந்தைகளின் வாயை பொத்தி தண்ணீரில் மூழ்கடித்தும்  கொலை! மனைவி எரித்துக் கொலை! சாப்பிட்டு கொண்டே டிவி பார்த்த கணவன்...

Controlling husband who suffocated his wife and drowned their two children before sitting down to eat and watch television is jailed for life
'Controlling' husband who suffocated his wife and drowned their two children before sitting down to eat and watch television is jailed for life
Author
First Published Apr 22, 2018, 10:13 AM IST


மனைவி மற்றும் தனது இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்றுவிட்டு பின்னர் வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டே சாப்பிட்டக் கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் சமி சலீம்  தனது மனைவி அரினா சயீத் மகள் ஷாதியா மற்றும் 4 வயது மகன் ரமி ஆகியோரை கொலை செய்த பின்னர் வீடு முழுதும் பெட்ரோல் உற்றி தீ வைத்து கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் அப்போது  உடனடியாக  பக்கத்து வீட்டில் உள்ளவர்கள்  கதவை உடைத்து காப்பாற்றி உள்ளனர். 

வீட்டின் ஒரு அறையில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் எரிந்த நிலையிலும்  இருந்ததையும் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். 

தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு வந்த போலீசார், மயக்க நிலையில் இருந்த சமி சலீம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சமீ சலீம் கொடுத்த வாக்குமூலம் அனைத்தும் அதிர்ச்சியளித்தது. இயல்பாகவே சமி சலீம் அவரது மனைவி மீது சந்தேகம் மற்றும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் மன போக்கிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி செல்போன் பயன்படுத்தவும் வெளியே எங்கும் செல்லக்கூடாது எனவும் தடைவிதித்துள்ளார்.

ஆனால் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அவரது மனைவி செல்போன் பயன்டுத்தியது சலீமுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. அதன் பின்னர் 25 லிட்டர் பெட்ரோல் வாங்கிவந்து வீடு முழுவதும் ஊற்றிவிட்டு பின்னர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் வாயை பொத்தி இழுத்துச்சென்று பாத்  தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த பின்னர் சடலங்களை ஒரு ரூமில் வைத்துவிட்டு. அதன் பின்னர் சாப்பிட்டு கொண்டே டிவி பார்த்த சலீம் வீட்டிற்கு தீ வைத்து தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். 

ஆனால் அதிக புகை ஏற்பட்ட காரணத்தினால் சலீம் இருந்த அறைக்கு தீ பரவவில்லை. இந்த கொடூர சம்பவத்தை செய்த சலீம்  ஒரு வித மனநோயினால் பட்டிருந்தார் என விசாரணையின் போது தெரிய வந்தது. இந்த விசாரணையின் தீர்ப்பில்3 கொலைகளை செய்துள்ள குற்றத்திற்காக சலீமுக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios