Asianet News TamilAsianet News Tamil

சீனாவில் கொடூர வைரஸ் கிருமிகளை பதுக்கிவைக்கும் கிடங்கு..!! அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

மிகக்கொடூரமான வைரஸ்களை பதுக்கி வைக்கும் கிடங்குகளை சீனா வைத்துள்ளது என்றும் அவற்றை ஆயுதமாகவும் சீனா பயன்படுத்துவதாகவும் அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்று குற்றம்சாட்டியுள்ளது .  

china has danger's virus warehousing american daily report against china
Author
Delhi, First Published Mar 30, 2020, 11:52 AM IST

மிகக்கொடூரமான வைரஸ்களை பதுக்கி வைக்கும் கிடங்குகளை சீனா வைத்துள்ளது என்றும் அவற்றை ஆயுதமாகவும் சீனா பயன்படுத்துவதாகவும் அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்று குற்றம்சாட்டியுள்ளது .   சீனாவின் வுகானால்  தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  இந்த வைரசுக்கு இதுவரையில்  7லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .  பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தையும் கடந்துள்ளது .  இந்நிலையில்  கொரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து சீனாவின் மீது குற்றச்சாட்டை வைத்து வருகிறது .  

 china has danger's virus warehousing american daily report against china

அமெரிக்காவை குறிவைத்து சீனா நடத்திய பயோ வார் இது எனவும்  குற்றம்சாட்டியது ,  அதுமட்டுமல்லாமல் சீனாவால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு சீனா நிச்சயம் விலை கொடுத்தே ஆகவேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதுடன் கொரோனா வைரசை சீன வைரஸ் எனவும் அடைமொழியிட்டு அழைத்து வருகிறது .  ஆனால் இக்குற்றச்சாட்டுக்கு சீனா தொடர்ந்து  மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் ,  அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் டபள்யூ மோசர் என்னும் எழுத்தாளர் சீனாவின் பிரபல நாளிதழான நியூயார்க் போஸ்ட் நாளிதழில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார் .  அதில் வுகான் நகரில் நுண்ணுயிரிகள் ஆய்வகம் இருப்பதாகவும் அதில் ஆபத்தான கிருமிகளை சீனா வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார் . கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் , 

china has danger's virus warehousing american daily report against china

 கொரோனா  போன்ற புதிய வகை வைரஸ்களை கையாளும் வகையில் நுண்ணுயிரியல் ஆய்வகங்கள் தனது பாதுகாப்பு  மற்றும் நிர்வாகத் திறனை வலுப்படுத்த வேண்டும் எனவும் அதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும் என்றும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது . சீனாவில் இந்த  அறிக்கையை  மேற்கோள் காட்டும் ஸ்டீவன் சீனாதான் இந்த வைரஸ் பரப்பியது என்பதற்கு இதுவே சான்று என குறிப்பிட்டுள்ளார் .  இந்நிலையில் சீனாவில் நடந்த ஆலோசனை கூட்டமொன்றில் பேசிய சீன அதிபர் ஜீ ஜின்பிங் ,  எதிர்காலத்தில் கொரோனா போன்ற வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு  நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அந்த அமைப்பிடம் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார் . ஆகவே தங்களிடம்  கொடூர கிருமிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை சீன அதிபர் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் எழுத்தாளர் ஸ்டீவன் சுட்டிக்காட்டியுள்ளார் . 

 

Follow Us:
Download App:
  • android
  • ios